Friday, April 6, 2012

இஸ்லாம் முன்வைத்துள்ள மனித உரிமைகள் - 03





இஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமைகள்.



                 
           Ash Sheikh. M.S.Riyaz Mohamed (Naleemi) M.A.,Dip.in Edu,

    இந்தத்தலைப்பு மிக விரிவாக நோக்கப்பட வேண்டிய தலைப்பாகும். ஆயின்,  அதனை இங்கு மிகச்சுருக்கமாக முன்வைக்கிறேன் இன்ஷா அல்லாஹ்,.  இன்று இஸ்லாமிய சமுகத்தில் பெண்கள் காணப்படும் நிலையை வைத்து, 'எல்லா மனிதர்களும் ஒன்று என்று கூறுகின்றது மனித உரிமைச் சட்டம். இஸ்லாத்தின் கோட்பாட்டின் படி, பெண் என்பவள் ஆண்களுக்குக் கீழாகவே கருதப்படுகிறாள். நீதிமன்றத்தில் ஒரு பெண் ஓர் ஆனின் பாதியாகவே கருதப்படுகிறாள். அவளுக்கு சுதந்திர நடமாட்டம் அனுமதிக்கப்படுவதில்லை. அவளுக்கு பாகப்பிரிவினையில் பாரபட்சம் காட்டப்படுகின்றது' போன்ற இஸ்லாத்தின் தாத்பரியங்களை விளங்காத சிலரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளாகும். இஸ்லாத்தின் உண்மை நிலையை விளங்கும் எவரும் இத்தகைய விமர்சனங்களை முன்வைக்க முடியாது.

    இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளையும், சலுகைகளையும் சரியாக விளங்குவதற்கு, இஸ்லாம் உலகிற்கு வருவதற்கு முன்பு பெண்ககளது நிலை எவ்வாறு இருந்தது என்பதனை விளங்குவது அவசியமாகும். அந்தவகையில், அதனை சுருக்கமாக நோக்கினால், இஸ்லாத்திற்கு முற்பட்ட காலமான கி.பி.586 இல்
கூடிய ஒரு மாநாடு, 'பெண்கள் மனிதப்பிறவியா அல்லது பிராணியாக ஏற்பதா' என விவாதித்து, 'அவள் ஆண்களுக்கு பணிவிடை செய்வதற்காக படைக்கப்பட்ட ஒரு மனிதப்பிறவி என்ற முடிவுக்கு வந்தது. 1995 ஆம் வருடம் பீஜிங் நகரில் நடைபெற்ற மாநாடும் கூட பெண்கள் பற்றிய சர்ச்சையையே
கிளப்பியது.

      இஸ்லாத்தின் வருகைக்கு முன்னர், சுமேரியர் ஒர் ஆண் குற்றம் செய்தால் மெலினமான தண்டனை வழங்கினர். அதே தவறை ஒரு பெண் செய்தாலோ கடுமையான தண்டனைகளை வழங்கினர். சிலபோது அவளது மூக்கை வெட்டி எறிந்தனர்.
 
       மெசபதேமியர், ஒரு பெண் கருச்சிதைவுக்குப்பின்னர் அவள் உயிரோடிருந்தாலும் சரி, மரணித்தாலும் சரி, அவளை கழுமரத்தில் ஏற்றினார்களே தவிர பூமியில் புதைக்கவில்லை.

       கிரேக்கர் தட்டுமுட்டு சாமான்களை வாங்குவதும் விற்பதும்போல பெண்களை வாங்கவும் விற்கவும் செய்தனர். அவர்களை மிருகங்களுக்குப் பகரமாக மாற்றும் பண்டமாற்றுப் பொருளாகவே கருதினர்.

      உரோமரிடத்தில் பெண்ணுக்கு எத்தகைய மதிப்பும் இருக்கவில்லை. அவள் நீதி கோறி நீதிமன்றத்துக்கு செல்ல முடியாத நிலையில் இருந்தாள். திருமணத்திற்குப்பின்பு அவளது சொத்துக்கள் யாவும் கணவனது உடமைகளாக மாறின. அவள் சுயமாக உழைக்கவோ, சொத்துக்கள் வைத்திருக்கவோ, விற்கவோ, வாங்கவோ அனுமதிக்கப்படவில்லை.

     இந்தியர் பெண்களை நஞ்சு, நரகம், நெருப்பு, மரணம், தொற்று நோய், நாகம் என்பவற்றைவிட கொடிய ஒன்றாகக்கருதினர். இறந்த கணவன் எறிக்கப்படும் போது உடன்கட்டையேற்றும் வழக்கு அங்கு காணப்பட்டது.

      முன்னைய கிருஸ்தவர்கள் பெண்களை நரகத்தின் வாயில் என்றும், தீமைகளின் அன்னை என்றும், ஷைத்தானின் முதல் உருவம் என்றும், கொட்டத்தயாராக நிற்கும் தேள் என்றும் கருதி வந்தனர்.

     அரேபியரைப் பொருத்தவரையில், அவர்கள் பெண்களுக்கு எவ்வித மதிப்பும் வழங்கவில்லை. போகப் பொருளாகவும், வியாபாரப் பண்டமாகவும் கருதினர். பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தனர். வாரிசு சொத்துக்களாக பகிர்ந்துகொண்டனர்.


      இத்தகைய ஒரு சூழ்நிலையிலேயே உலகிற்கு இஸ்லாம் வந்தது. பெண்களை இஸ்லாம் உயர்ந்த அந்தஸ்தை வழங்கி கௌரவப்படுத்தியது. பெண்களை வாரிசுச் சொத்துக்களாக பகிர்ந்து கொண்ட அராபியருக்கு மத்தியில், அவர்களுடைய சொத்துக்களிலிருந்து பெண்களுக்கு பாகம் குறித்தது. குழந்தைகளை கொலை செய்வதை கடுமையாக எச்சரிக்கிறது. அதனை மறுமை வாழ்வுடன் தொடர்பு படுத்தி அச்சமூட்டுகிறது. 'உயிருடன் புதைக்கப்பட்ட (பெண்குழந்தையான)வளும் வினவப்படும் போது. எக்குற்றத்திற்காக கொல்லப்பட்டாள் (என்று வினவப்படும் போது) (82:8-9)

    பெண்கள் மனித இனமா என்று விவாதம் நடத்திய சமகத்தில், ஆண்களும் பெண்களும் சமனே, அவர்கள் ஒரே ஆண் பெண்ணிலிருந்து தோன்றியோர் என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது. 'மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனைப்பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆனடமாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரைப் படைத்து) அவரிலிருந்து அவரது மனைவியைப் படைத்தான். பின்னர், அவர்கள் இருவரிலிருந்தும் பல ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான்'. (4:1)

இவ்வாறே, ஆண்களுக்குப்போலவே பெண்களுக்கும் சம உரிமைகளை இஸ்லாம் வழங்கியுள்ளது. நன்மையான செயல்களுக்கான கூலி இரு சாராருக்கும் சமனாக வழங்கப்படுகிறது. பெண்களின் உயிர், கண்ணியம் சொத்து ஆகியவற்றிற்கான உரிமைகள் ஆண்களைப் போன்றே வழங்கப்படுகின்றன. சொத்துக்களை வைத்திருப்பதற்கு மாத்திரமன்றி, அவற்றை விற்கவோ, வாங்கவோ பூரண சுதந்திரம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 'இறந்து போன  பெற்றேரோ, நெருங்கிய உறவினரோ விட்டுப்போன பொருள்களில் ஆண்களுக்குப் பாகமுண்டு. அவ்வாறே பெண்களுக்கும் பாகமுண்டு' (4:7)

    ஒருவர் இறந்து போனதும் அவரது சொத்துக்களை வாரிசு சொத்துக்களாக பங்கிடுவது போல இறந்து போன மனிதரின் மனைவியரை பங்கிட்டுக்கொள்ளும் துர் பழக்கம் ஜாஹிலிய்யா சமுகத்தில் காணப்பட்டது. மனிதாபிமானமற்ற இந்த பாரம்பரியத்தை இந்லாம் அழித்தொழித்து, பெண்ணின் ஆளுமைக்கு மதிப்பும், கண்ணியமும் வழங்கியது. 'விசுவாசம் கொண்டோரே! பெண்களை (இறந்தவரது சொத்தாக மதித்து அவர்களை) பலவந்தமாக நீங்கள் அனந்தரம் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல' (4:19)

     ஜாஹிலிய்யாக்கால இக்கொடிய பழக்கத்திலிருந்து பெண்களை விடுவித்த இஸ்லாம், தனது கணவனை எத்தகை நிர்ப்பந்தமுமின்றி விரும்பியவாறு தெரிவுசெய்யும் உரிமையையும் அவளுக்கு வழங்கி கௌரவித்தது. எந்தவொரு விதவைக்கும் அவளுடன் கலந்தாலோசிக்காது மணமுடித்து வைப்பது கூடாது. அவளது விருப்பம் பெறப்படல வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்தியது.

      இஸ்லாம் ஆண்களுக்கு மாத்திரமன்றி பெண்களுக்கும் தான் விரும்பாத போது கணவனிடமிருந்து விவாகரத்து பெறும் உரிமையை வழங்குகிறது. இதனையே இஸ்லாமிய சட்டவியலில் 'அல்குல்உ' என்ற அம்சம் குறிக்கிறது. அத்தோடு, ஆண்களைப்போன்றே பெண்களுக்கும் பொருளாதார சமத்துவத்தை இஸ்லாம் தான் முதலில் முன்வைத்தது எனலாம். 'ஆண்களுக்கு அவர்கள் சம்பாதித்வை உரியன. பெண்களுக்கு அவர்கள் சம்பாதித்தவை உரியன.(4:32) 'ஆண்களுக்கு முறைப்படி பெண்களுக்கு உள்ள உரிமைகள் போன்றே(ஆண்கள் மீது) பெண்களுக்கும் உண்டு' (2:228)

   பெண்களுடன் அன்பாகவும், கணிவுடனும் நடக்குமாறு இஸ்லாம் ஏவுகின்றது. 'உங்கள் பெண்களுக்கு நீங்கள் கொடுத்ததில் எதையும் எடுத்துக்கொள்ளும் பொருட்டு அவர்களை (உங்களது வீட்டில்) நீஙகள் தடுத்து வைக்காதீகள். மேலும் அவர்களுடன் நீங்கள் கண்ணியமான முமறையிலும், சகிப்புத் தன்மையுடனும் நடந்து கொள்ளுங்கள்.

     பெண்களது மானத்திற்கான உரிமையையும் உத்தரவாதத்தினையும் இஸ்லாம் வழங்குகிறது. எனவேதான், ஏராளமான மேற்கத்தைய பெண்கள் இன்று இஸ்லாத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறார்கள். அல்குர்ஆன் கூறுகிறது, 'எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி, (அதற்கு வேண்டிய) நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டுவராவிட்டால், அவர்களை நீங்கள் 80 கசையடி அடியுங்கள். பின்னர் அவர்கள் கூறும் சாட்சியத்தை எக்காலத்திலும் ஒப்புக்கொள்ளாதீர்கள். ஏனெனில், நிச்சயமாக அவர்கள் வரம்பு மீறியவர்கள்'. (24:4)

     இவ்வாறு இஸ்லாம் பெண்களுக்குத் தேவையான சகல உரிமைகளும் அவர்கள் கேட்காமலே, அவர்கள் போராடாமலேயே அவர்களுக்கு வழங்கியது. ஆனால், இன்று மனித உரிமை என்ற பெயரில் பெண்கள் மீண்டும் அந்த ஜாஹிலிய்யாவை நோக்கி செல்கின்றனர். தாம் ஒரு போகப்பொருளாக இருப்பதற்கும், விலை மாதர்களாக இருப்பதற்குமென தமது கண்ணியத்தை தாமே அவர்கள் குழைத்துக்கொள்கின்றனர்.

    ஆண்களைப்போன்று பெண்களும் சகல அம்சங்களிலும் சமத்துவம் கோறுவது என்ற விடயத்தைப் பொருத்தவரையில், அது சாத்தியமற்ற விடயமாகும். காரணம், ஆணும், பெண்ணும் இயல்பிலேயே பல வேறபாடுகளுடன் படைக்கப்பட்டுள்ளனர். பெணடகளே குழந்தை பெறுகின்றனர். ஆணைப் பொருத்தவரையில் அவனுக்கு இந்த வாய்பு இல்லை. ஆணின் முகத்தில் தாடி, மீசை முழைக்கிறது. ஆனால், பெண்களுக்கு அவ்வாறு இல்லை. உடலுறுப்புகள் இருபாலாருக்கும் ஒரே அமைப்பில் இல்லை. பெண்களுக்கு மாதாந்த ருது ஏற்படுகிறது ஆண்களுக்கு இல்லை. இவ்வாறு இருபாலாருக்குமென பல வித்தியாசங்களை வெளிப்படையாகவே அவதானிக்கலாம். இவற்றையெல்லாம் மாற்றி, சமப்படுத்துவதன் மூலம் சமத்துவ உரிமையை வழங்க முடியும் என்று வாதாடுவதானால் அது அறிவீனமாகும். தனது முகத்தை நன்கு சவரம் செய்து கொள்வதன் மூலமோ பெண்களைப்போன்று ஆடை அநிந்துகொள்வதன் மூலமோ ஆண் செயற்கை கருப்பை மூலம் குழந்தையை உருவாக்குவதன் மூலமோ ஆணும் பெண்ணும் சமமாகி விட முடியாது. ' அது அல்லாஹ் விதித்த நியதியாகும், 'அல்லாஹ் மனிதர்களைப் படைத்;த வழியே அவனுடைய இயற்கை வழி. அவனது படைப்பில் எவ்வித மாற்றமும் இல்லை' (30:30) என அல்குர்ஆன் இதனைத் தெளிவுபடுத்துகிறது.

    எனவே, இஸ்லாம் உரிமைகளை வழங்கும்போது ஆண் பெண் இருபாலாரதும் இயற்கை அமைப்புக்களையும், இயல்பூக்கங்களையும் நன்கு அறிந்து அவற்றின் அடிப்படையிலேயே தீர்மானம் மேற்கொண்டிருக்கிறது. அந்தவகையில் சில விடயங்களில் ஆண்களுக்கு சில உரிமைகளை அதிகமாகவும், வேறு சில விடயங்களில் பெண்களுக்கு உரிமைகளை ஆண்களை விட சற்று அதிமாகவும் அது வழங்கியுள்ளது என்ப குறிப்பிடத்தக்கதாகும்.

இஸ்லாம் வழங்கியுள்ள பொருளாதார உரிமைகள்.

    இஸ்லாம் சுதந்திரமான செயற்பாடு, பரஸ்பர கூட்டுறவு, ஒத்துழைப்பு தனிப்பட்டவர்களது சேவைகள், பணிகளின் பரஸ்பரப் பரிமாற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் தனது பொருளாதாரக் கோட்பாட்iடி வகுத்துள்;ளது. இந்த பொருளாதார அமைப்பில்  ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வாழ்வின் அடிப்படைத் தேவைகளை நிiவேற்றும் உரிமைகளை வழங்கியுள்ளது.

   சொத்துக்களைப் பொருத்தவரையலி இஸ்லாம் ஒ புரட்சிகரமான கொள்கையை அறிமுகப்படுத்தியது. இஸ்லாத்தின் சொத்துரிமைக் கோட்பாட்டிலிருந்தே மனிதனின் பொருதாராத உரிமைகள் எனும் அணுகுதல் தோற்றம் பெற்றது.

    இஸ்லாமிய நோக்கில் செல்வம் யாவும் அல்லாவுக்குரியது. 'வானங்கள் பூமியிலுள்ள யாவும் அல்லாஹ்வுக்கேயுரியன' (53:31) என அல்குர்ஆன் கூறுகின்றது.

    எனவே, மனிதர்கள் அனைவரும் பணன்பெறவே இந்தப் பூமியையும் அதிலுள்ள அனைத்தினையும் அவன் படைத்தான்.'மேலுமு, பூமியைப் படைத்து அதனைப் படைப்பினங்களுக்காக அவன் அமைத்தான்...' (55:10)

    இப்பிரபஞ்சப் பொருட்கள் யாவும் அல்லாஹ்வுக்குரியனவாகவிருப்பதால், மனிதன் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பாளியாகவே உள்ளான். எனவே, மனிதன் இறைக்கட்டளைக்கேட்பவும், மனித சமுகத்தின் பொது நலன்களுக்காகவும் அதனைப் பயன்படுத்த கடமைப்பட்டுள்ளான்.

      ஆயினும், இஸ்லாம் தனிமனித சொத்துரிமையையும் ஏற்றுக்கொள்கிறது. 'ஆண்களுக்கு அவர்கள் சம்பாதித்தவற்றில் பங்குண்டு, பெண்களுக்கு அவர்கள் சம்பாதித்தவற்றில் பங்குண்டு' (4:32)

      இஸ்லாம் செல்வந்தர்களின் சொத்திலிருந்து ஏழைகளுக்குரிய பங்குகளை அங்கிகரிக்கிறது. சொத்துக்களை பயன்படுத்த இஸ்லாம் விதித்துள்ள சட்டங்கள் ஏழைகளினது உரிமைகளைப் பரிக்காமல் பாதுகாக்கிறது. சொத்துக்கள் சிலரினது கைகளில் மட்டும் சுழல்வதற்கு இஸ்லாம் அனுமதிக்கவில்லை. அவ்வாறு சுழல்வதை இஸ்லம் பெரும் அநீதியாகக் கருதுகின்றது.

    இன்று அமேரிக்காவின் நிலையை எடுத்துக் கொண்டால், மிக்க செல்வச் செழிப்புடன் காணப்படும் அமேரிக்காவில் வறுமைக்கோட்டிற்கும்  கீழே வாழுகின்ற மக்கள் தொகையினரே அதிகம். அங்கு நடைபெறும் பொருளாதார சீர்கேட்டின் விளைவாக 20 விகிதமான மக்கள் தொகையினர் 90 சதவிகித சொத்துக்களை அனுபவிக்கின்றனர். இது பெரும் அநீதமாகும். (வெற்றிகொள்ளப்படும்  அனைத்து) ஊர்களிலிருந்தும்  அல்லாஹ் தனது தூதர்களுக்குக் கொடுத்தவைகள், அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும், பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரித்தானவையாகும். செல்வம் உங்களில் பணக்காரர்களிடையில் மட்டுமே சுற்றிக்கொண்டிருக்காமலிருக்க (மற்றவர்களுக்குக் கிடைக்கும் பொருட்டு இவ்வாறு அவன் கட்டளையிடுகின்றான்)' (59:7) இது தான் இஸ்லாத்தின் நீதிக்கு உதாரணமாகும்.

       அல்குர்ஆனின் கருத்துப்படி உலகில் மனிதன் உயிர்வாழத் தேவைப்படும் அனைத்தும் அனைவரதும் உரிமையாகும். உலகில் சிலருக்கு சிலரை விட மேலதிகமாக சொத்து சம்பாதிக்க முடிகிறது என்றால் அவர்கள் மேலதிகமாக சம்பாதிக்க முடியாதவர்களுக்காக தமது மேலதிக பங்கிலிணரந்து கொடுத்துதவ வேண்டுமென இஸ்லாம் எதிர்பார்க்கிறது.

   'இன்னும் அவர்களுடைய பொருட்களில் யாசிப்போருக்கும் யாசிக்காதோருக்கும் உரிமையுண்டு' (51:19)

   'இன்னும் அர்கள் எத்தகையேரெனில், அவர்களின் பொருட்களில் குறிப்பிட்ட உரிமை இருக்கிறது. யாசிப்போருக்கும், (யாசிக்க வெட்கப்பட்டு) ஒதுங்கிக்; கொள்வோருக்கும் உரிமை இருக்கிறது' (59:23-24)

     சமுகத்திலுள்ள சகல தரப்பினரதும் பொருளாதார உரிமைகளை உறுதி செய்வதற்காக இஸ்லாம் வியாபாரம் தொடர்பான ஒரு ஒழுக்கக் கோவையையே உருவாக்கியுள்ளது. இரவல் தொடர்பாக, அவை ஒப்படைப்பதன் அவசியம், கடன் தொடர்பாக, அவற்றை உரய நேரத்தில் மீளச் செலுத்துவதன் முக்கியத்துவம். சொத்துக்களை அநியாயமாகவும், தவறான முறையிலும் விழுங்குவதன் பாரதூரம், அளவை நிறுவையில் மோசடி செய்வதன் பாரதூரம், வட்டியின் விபரீதங்கள், கலப்படம், பொய்சத்தியம் செய்வதன் விபரீதங்கள், மக்களுக்கு பாதகம் ஏற்படும் விதத்தில் பொருட்களை பதுக்குபவனது நிலை போன்ற இன்னோரன்ன செயற்பாடுகளைத் தடுத்து பொருளாதார உரிமைகளை மேம்படுத்துவதனைக் காணலாம்.

    ஒரு தனிமனிதனின் சொத்துக்கும் இஸ்லாம் உத்தரவாதமளித் திருப்பதைக்க காணலாம். ஒருவரது பொருளாதார உடைமையை எத்தகைய நட்டஈடும் வழங்களமல் சுவீகர்ப்பதற்கு அரசுக்குக்கூட உரிமை கிடையாது. ஹூனைன், தபூக் யுத்தங்களின் போது கடுமையான பொருளாதார நெருக்கடியின் போது கூட மக்களது உடமைகளை கட்டாயத்தின்பேரில் சுவீகரிக்க நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை. மாறாக, மக்களுக்கு விரும்பியவாறு அன்பளிப்பு செய்யும்படி ஆலோசனை கூறியதுடன். மேலதிகமாக கடன்களையும் பெற்றார்கள்.

     இஸ்லாம் பொருளாதாரத் துறையில் தனியாருடை சொத்துரிமையை பாதுகாக்கிறது என்பதன் மூலம் அது சமுகத்தின் பொருளாதார நலவுரிமையை பாதிக்கும் வகையில் தனிமனிதர்கள் எவ்வித வரம்பும், கட்டுப்பாடுமற்ற பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டு பொருளாதாரச் சுரண்டலில் ஈடுபடலாம் என்பது பொருளல்ல. மாறாக பொருளாதாரத் துறையுடன் தொடர்பான இஸ்லாமியக் கோட்பாடானது இந்நடவடிக்கையில் ஈடுபடும் சகல தரப்பினரதும் உரிமைகளை உறுதி செய்யும் வகையிலேயே அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

இஸ்லாம் முன்வைத்துள்ள அரசியல் உரிமைகள்
    இஸ்லாத்தின் அரசியல் உரிமைகள் தொடர்பான கோட்பாடானது, ஆட்சி பற்றிய இஸ்லாத்தின் கோட்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது. மௌலானா மௌதூதி அவர்கள் ஆட்சி பற்றிய இஸ்லாமியகோட்பாட்டினை பின்வருமாறு விளக்குகிறார்கள், 'இஸ்லாமிய ஆட்சியின் நோக்கம் வெறுமனே மக்கள் ஒருவரை ஒருவர் சுரண்டுவதிலிருந்து தடுப்பதும், மக்களின் சுதந்திரத்தைப் பேணுவதும், ஆட்சியின் பிரஜைகளை வெளிநாட்டுப் படையெடுப்புகளிலிருந்து பாதுகாப்பது மட்டுமல்ல. அல்லாஹ் அல்குர்ஆனில் வரையறுத்திருக்கும் வகையிலான ஒழுங்கும் சமபலமுமுடைய ஒரு சமுக நீதி முறையை உருவாக்குவதையும் அது நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன் நோக்கம் எல்லாவகையான தீமைகளையும் ஒழித்து, அல்குர்ஆன் கூறும் எல்லாவகையான நன்மைகளையும் குண ஒழுக்கங்களையும் வளப்பதுமாகும்'

   இஸ்லாமிய ஆட்சிமுறையானது சர்வாதிகார ஆட்சி முறையன்று. அது ஜனநாயக கோட்பாடுகளில் நம்பிக்கையுள்ள ஓர் அரசியலமைப்பாகும்.  அது தனது ஆட்சிமுறைமையை மக்களோடு கலந்தாலோசித்து தீர்மானம் மேற்கொள்ள வேண்டிய அரசியலமைப்பாகும். எனவேதான், இன்று இஸ்லாமிய உலகில உள்ள மேற்கின் கைப்பாவைகளாக, தலையாட்டு பொம்மைகளாக விளங்கும் சர்வாதிகார  ஆட்சியாளர்கள் இவ்வாட்சி முறையினை விமர்சிப்பதைக் காணலாம். 'உலகம் முழுவதும் வழக்கத்திலிருக்கும் சுயாட்சி நம் நாட்டு மக்களுக்கு உகந்தால்ல. முழுச்சுதந்திரமான குடியரசு நமது நாட்டுக்கு ஒத்துவராது' என சவுதி அரேபியாவன் மன்னர் பஹ்த் கூறியிருப்பது இதற்கு சிறந்த உதாரணமாகும்.

   இஸ்லாமிய ஆட்சியின்போது அது குடிமக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் மாத்திரம் தனித்தலைப்பாக ஆராயப்பட வேண்டிய மிகப்பெரும் தலைப்பாகும். எனவே, அது முன்வைத்துள்ள குடிமக்களுக்கான உரிமைகளை சுருக்கமாக நோக்கினால் பின்வருமாறு கூறலாம்.

    உயிர் உடைமைப் பாகாப்பு

      இ;த்தலைப்பை விளக்க 'எவனொருவன் மற்றொரு ஆத்மாவைக் கொலை செய்ததற்குப் பிரதியாகவோ அல்லது பூமியில் குழப்பத்தைத் தடை செய்வதற்காகவோ அன்றி (அநியாயமாகக்) கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையும் கொலை செய்தவன் போலாகின்றான். அன்றி எவன் ஒரு ஆத்மாவை வாழ வைக்கிறானோ, அவன் மனிதர்கள் யாவரையும் வாழ வைத்தவன் போவான்'. (5:32) என்ற அல்குர்ஆன் வநனமே போதுமானதாகும்.

    நபியவர்களின் இறுதி ஹஜ் பேருரை இதற்கு தக்க உதாரணமாகும். 'இறந்வர்களை மீண்டும் எழுப்பப்படும் நாளில் நீங்கள் இறைவனைச் சந்திக்கும் வரையில் உங்களது உயிர்களும், உடைமைகளும் ஒருவருக்கொருவர் பறித்துக்கொள்ள தடைசெய்யப்பட்டுள்ளது'


      இவ்வசனங்கள் முஸ்லிமை மட்டும் குறிப்பதன்று, மாறாக, இஸ்லாமி ஆட்சியின் கீழ் வாழும் சகலரையும் குறிக்கும் பொது வசனங்களாகும்.

    சாதாரணமாக, இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழும் குடி மகன் என்ற வகையில், முஸ்லிமல்லாதாரின் உயிர் உடமைப் பாதுகாப்பு தொடர்பாகவும் (ஸல்) அவர்கள் வலியுறுத்தினார்கள், 'ஒப்பந்தத்தில் உள்ள ஒரு திம்மியை(முஸ்லிமல்லாதாரை) எவரேனும் கொலை செய்தால் அவர் சுவர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்' (புஹாரி, அபூதாவுத்)

    மற்றுமொருமறை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், 'யார் முஸ்லிமல்லாத ஒரு உடன்படிக்கை செய்திருக்கும்  திம்மிக்கு அநீதியிழைக்கிறாரோ அல்லது அவரது உரிமையைக் குறைக்கின்றாரோ, அல்லது அவரது சக்திக்கு மேல் பொறுப்புக்களை சுமத்துகின்றார்களோ அல்லது அவரது மன விருப்பின்றி ஏதேனுமொன்றை அவரிடமிருந்து பெறுகின்றாரோ அவருக்கெதிராக மறுமையில் நான் வாதிடுபவனாக இருப்பேன்' (அபூதாவுத்)
   
     ஒரு தடவை எகிப்தில் கவர்னராக இருந்த அம்ரிப்னுல் ஆஸ் (ரழி) அவர்கள் பள்ளிவாசலை விஸ்தரித்து கட்டுவதற்காக ஒரு யூதப் பெண்ணின் வீட்டை அவளது விருப்பமின்றி வேறு இடம் தருவதாகக் கூறி உடைத்து விட்டு பள்ளிவாசலை விசாலமாக்கிக் கட்டினார்கள். அப்பெண் தலைநகருக்குச் சென்று கலீபாவாக அன்று காணப்பட்ட உமர் (ரழி) அவர்களிடம் முறையிட்டாள். உடனே அம்ரிப்னுல் ஆஸ் (ரழி) அவர்களை வரவழைத்து விசாரித்தபோது, அவள் அளவுகதிகமாக ஈட்டுத்தொகையை எதிர்பார்ப்பதாகவும், அவளது ஈட்டுத்தொகை பைத்துல் மாலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தபோது உமர் (ரழி) அவர்கள் அப்பள்ளிவாசலை இடித்துவிட்டு அப்பெண்ணின் வீட்டைக் கட்டிக்கொடுக்குமாறு உத்தரவிட்டார்கள். இச்சம்பவமானது இஸ்லாமிய ஆட்சியின் கீழ் முஸ்லிமல்லாதார் கூட தங்களது உடமைப் பாதுகாப்புக்கு எந்தளவு உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது கண்கூடு. இவ்வாறான ஏராளமான சம்பவங்களை இஸ்லாம் அரசோச்சிய கால வரலாற்றில் கண்டுகொள்ள முடியும்.

    எனவே, இஸ்லாமிய அரசாட்சியின்போது குடிமக்கள் முஸ்லிம், முஸலிமல்லாதார் என பாகுபாடின்றி சகலரினதும் உயிர், உடமைப்பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிறது.


கௌரவத்திற்கு பாதுகாப்பு

    இஸ்லாமிய அரசு வழங்கும் உரிமைகளில் தனிமனிதரது கௌரவத்திற்கு வழங்கும் பாதுகாப்பு அடுத்து குறிப்பிடத்தக்கதாகும். அல்லாஹ் அல்குர்ஆனிலே இது தொடர்பாக குறிப்பிடும் போது நீண்ட விளக்கங்களை வழங்குகின்றான். அவற்றில், ' விசுவாசிகளே! ஒரு சமுகத்தார் மற்ற சமுகத்தாரை பரிகாசம் செய்ய வேண்டாம். பரிகாசம் செய்யப்படும் அவர்கள் பரிகாசம் செய்யும் இவர்களை விட சிறந்தவர்களாக இருக்கலாம். எந்தப் பெண்களும் மற்றெந்தப் பெண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். பரிகாசம் செய்யப்படும் அவர்கள் பரிகாசம் செய்யும் இவர்களை விட சிறந்தவர்களாக இருக்கலாம். உங்களில் சிலர் சிலரை குறை கூறவும் வேண்டாம். உங்களில் சிலர் சிலரை பட்டப்பெயர் கூறி அழைக்கவும் வேண்hம். விசுவாசம் கொண்டபின்னர் (தீயவற்றைக் குறித்துக் காட்டும்) தீய பெயர் கூறுவது மிகக் கெட்டதாகிவிட்டது... விசுவாசிகளே! தவறான எண்ணத்தில் பெரும்பாலானவற்றை நீங்கள் தவிர்த்துக்கொள்ளுங்கள். நிச்சயமாக (தவறான) எண்ணத்தில் சில பாவமாகும். (எவருடைய குறையையும்) நீங்கள் துருவித்துருவி விசாரித்துக்கொண்டிருக்காதீர்கள். உங்களில் சிலர் சிலரைப் புறம் பேசவும் வேண்டாம்... ' (49:11-12)

    இவ்வாறு பல வசனங்களின் ஊடாக ஆட்சியின் கீழ் வாழும் மக்களது கௌரவப் பாதுகாப்பிற்கான உத்தரவாதத்தினையும் உரிமையை இஸ்லாம வழங்குகிறது. ஒருவன் மற்றொருவனுடன் அவனது கௌரவம் பாதிக்கப்படும் வகையில் நடநந்து கொண்டால், அவன் எந்த அந்தஸ்தில் உள்ளவனாக இருந்தாலும் அவனுக்குரிய தண்டனையை இஸ்லாமிய அரசு வழங்கும். இதற்கு சிறந்த சான்றாக ஆரம்பத்தில் கூறப்பட்ட எகிப்தின் ஆளுனர் அம்ரிப்னுல் ஆஸ் (ரழி) அவர்களுடன் உமர் (ரழி) அவர்கள் நடந்துகொண்ட விதத்தினைக் கூறலாம்.

     பாதிக்கப்பட்டவன் முஸ்லிமாக, முஸ்லிமல்லாதானாக இருப்பினும் அனைவருக்கும் ஒன்றாகவே கொள்ளப்படும். எனவேதான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு பயந்துகொள்ளுங்கள். அவன் முஸ்லிம்லாதவனாக இருப்பினும் சரியே அவனுக்கும் அல்லாஹ்வுக்குமிடையில் எத்தகைய திரையுமில்லை' (முஸ்னத் அஹ்மத்)

யார் ஒரு திம்மியை (இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழும் முஸ்லிமல்லாதவர்) நோவினை செய்கின்றாரோ, அவர் என்னை நோவினை செய்கின்றார். யார் என்னை நோவினை செய்கின்றாரோ அவர் அல்லாஹ்வை நோவினை செய்கின்றார்'.

     மற்றொரு முறை கூறினார்கள். யார் ஒரு முஸ்லிமல்லாத ஒரு திம்மியை இம்சிக்கின்றாரோ நான் அவருடைய எதிரியாவான். நான் யாருடைய எதிரியாக இருப்பேனோ மறுமையில் அவருக்கெதிராக வாதிடுபவனாக இருப்பேன்' (தாரிக் பக்தாத்)

      இவ்வாறு, முஸ்லம்கள், முஸ்லிமல்லாதார் என்ற பாகுபாடின்றி சகல தரப்பினரதும் கெரவத்தைப் பாதுகாக்கும் வகையிலான பல சட்டங்களை இஸ்லாம் முன்வைத்துள்ளது.

      மேலை நாடுகளைப் பொருத்தவரையில், வெதூறு சட்டத்திலுள்ள விடயம் என்னவென்றால், கௌரவமானவன் என்றும் உயர் அந்தஸ்துப் பெற்றவன் என்றும் நிரூபக்க வேண்டும். விசாரனையின்போது நீதிபதிகள் அடங்கிய குழுவினால் கடுமையான தாக்குதலுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும், இம்சித்தலுக்கும் அவன் உட்படுகிறான். தனது புகழுக்கு, மானத்திற்கு இழுக்கு ஏற்பட்டுவிட்டது என்று நீதிமன்றத்தில் நீதி கேட்டுச் சென்றால், அங்கு அதைவிட அதிகமாக இழிவுபடுத்தப்படுகிறான். இந்நிலையுடன் இஸ்லாமிய தீர்ப்பை ஒப்பிடும் போது, அவதூறு நிரூபிக்கப்பட வேண்டுமென்றால் அவன் 4 கண்ணால் கண்ட சாட்சிகளுடன் வர வேண்டும். அதில் ஒருவர் தடுமாறினாலும் கூட ஒருவரின் மானத்தை பரித்த குற்றத்திற்கான தண்டனையாக அவருக்கு கசையடி வழங்கப்படுகிறது. ஒரு மனிதரின் மானம் என்பதை அந்தளவு புனிதமானதாக இஸ்லாம் கருதுகிறது.

    இவை தவிர இஸலாமிய குடியரசில் வாழும் மக்களுக்காக அது முன்வைத்துள்ள உரிமைகளை மிக சுருக்கமாக குறிப்பிடுவதானால்

  • ஒவ்வொரு தனிமனிதனதும் புனிதம், பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிறது

  •   ' ஒவ்வொரு தனிமனிதனதும் சுதந்திரத்திற்கான உத்தரவாதம் வழங்கப்படுகிறது.

  •  ஒவ்வொரு தனிமனிதரும் கொடுங்கோண்மைக்கு எதிராக போரடுவதற்குரிய   சுதந்திரத்தை அது வழங்கியுள்ளது.

  •  ஒவ்வொரு தனிமனிதருக்கும் கருத்துச்சுதந்திரத்தை சழங்கியுள்ளது.

  •  ஒவ்வொரு தனிமனிதருக்கும் கூட்டமைப்புகளை உருவாக்கும் உரிமையை அது வழங்கியுள்ளது.

  • ஒவ்வொரு தனிமனிதனதும் மனசாட்சிக்கும், சமயக் கோட்பாடுகளுக்குமான உரிமையையும் சுதந்திரத்தையும் வழங்கியுள்ளது.

  • ஒவ்வொரு தனிமனிதனதும் மத உணர்வுகளுக்குரிய பாதுகாப்பையும், உரிமையையும் அது வழங்கியுள்ளது.

  • ஒவ்வொரு தனிமனிதனையும் எதேச்சதகாரமாக அவசரகால சட்டத்தின் அடிப்படையில் சிறைப்படுத்துவதிலிருந்து பாதுகாக்கும் உரிமையை வழங்குகிறது.

  • ஒவ்வொரு தனிமனிதனதும் வாழ்வின் அடிப்படைத் தேவைகளையும் பூரணப்படுத்துவதற்கான உரிமையை அது வழங்குகிறது.

  •   ஒவ்வொரு தனிமனிதனும் ஆட்சியாளரை கேள்வி கேட்கும், அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும் உரிமையை இஸ்லாமி ஆட்சிமுறையில் வழங்குகிறது.

  • ஒவ்வொரு தனிமனிதனதும் தீமையைத் தடுப்பதற்கான உரிமையை அது வழங்குகின்றது.

  • ஒவ்வொரு தனிமனிதனும் அரச விவகாரங்களில் கலந்து கொள்ளும் உரிமையை அது வழங்குpறது.

யுத்தங்களின்போது எதிரிகளின் உரிமைகள்
    இஸ்லாம் முஸ்லிம்களுடன், முஸ்லிம் ஆட்சியில் அரசியல் உடன்படிக்கை செய்துகொண்டு வாழும் முஸ்லிமல்லாதோர் மாத்திரமன்றி, முஸ்லிம்களுடன் யுத்தம் புரியும் நிலையிலுள்ள எதிரிகளுடன் கூட எவ்வாறு எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், அவர்களுக்குரிய உரிமைகள் என்னவென்பதை சொல்லி, நடைமுறைப்படுத்திக் காட்டியுள்ளது.

     மேற்கு நாடுகள் இருபதாம் நூற்றாண்டில் கூட யுத்தங்களின் போது நடந்து கொண்ட காடைத்தனமான செயற்பாடுகள் காரணமாகவே, 1948 ஆம் ஆண்டு ஐ.நா. சபை உருவாக்கப்பட்டது. அவ்வாறு இருந்தும்கூட இக்கட்டுரை எழுதப்படும் இந்த நேரத்திலும் கூட அவர்கள் முஸ்லிம் நாடுகளில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் பல நாடுகளில் செய்கின்ற அட்டூளியங்கள், பெண்களை பாலியல் பலாத்காரத்துக்குற்படுத்தி, கொலை செய்து, சிறுவர்கள், வயோதிபர்கள் என பாராமல் அனைவரையும் கொலை செய்து இனச்சுத்திகரிப்;பு  நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதனைக் காணலாம்.


   இவர்கள் பேசும் போர்த் தத்துவங்கள், உரிமைகள் முஸ்லிம்கள் அவர்களுக்கெதிராக போர் செய்கின்ற போது முஸ்லிம் தரப்பினரால் மட்டும் பேணப்பட வேண்டியவை. அவை அவர்களால் பின்பற்றப்பட அவசியமில்லாத ஒன்றாகவே கருதுகின்றனர். போதாக்குறைக்கு, தாம் தாம் உலகிற்கு போர்ச்சட்டங்கள், கைதிகள் பற்றிய உரிமைகளை வழங்கியோர் என்று பெறுமைப்படவும் செய்கின்றனர்.

     ஆனால், இஸ்லாம் போரின்போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை 1400 வருடங்களுக்கு முன் சொல்லியது மட்டுமல்ல, செய்தும் காட்டியது. போர்க்காலங்களின்போது போரில் கலந்துகொள்ளாத மக்களுடைய உரிமைகளை இஸ்லாம் வழங்கியுள்ளது. எதிரி நாட்டைச் சேர்ந்தோராக இருப்பினும் அவர்களில் போரில் ஈடுபடாத பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள், அங்கவீனர்களுக்கு பாதகம் ஏற்படாத வகையில் நடந்து கொள்வதை இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது.

    இது தொடர்பாக நபி (ஸல்) கூறும் போது, 'வயது முதிர்ந்தவர்கள், குழந்தைகள், பெண்கள், ஆகிய யாவரையும் கொல்லாதீர்கள்' (அபூதாவூத்)
   
      'மடங்களிலுள்ள துறவிகளை கொல்லாதீர்கள். வணக்கத்தலங்களிலுள்ள சந்நியாசிகளைக் கொல்லாதீர்கள்' (முஸ்னத் அஹ்மத்)

     போரின்போது தரையில் ஒரு பெண்ணின் சடலம் வீழ்ந்து கிடப்பதைக் கண்ட நபியவர்கள் கூறினார்கள், 'இவள் போர் செய்யவில்லை. பின் ஏன் இவள் கொலைக்கு ஆளானால்!?'.

     போரில் கலந்து கொள்ளாத மக்கள் போரின்போதோ அல்லது அதற்குப் பின்போ, கொள்ளப்படக்கூடாது, என்ற கோட்பாட்டினை இந்த ஹதீஸ்கள் தெளிவாக கூறுகின்றன.

போரில் கலந்து கொண்டு போராடுவோருக்கான உரிமைகள்

    போராட்டத்தில் கலந்து கொண்டு போராடும் போராட்ட வீரர்களுடன் கூட ஒரு முஸ்லிம் தான் நினைத்தவாறெல்லாம் நடந்துவிட முடியாது. அதற்கும் சில வரையறைகளை இஸ்லாம் விதித்துள்ளது. 

  
  •       ' நெருப்பினால் சித்திரவதை செய்வதை இஸ்லாம் தடை விதிக்கிறது.
 
  •    'காயம் பட்டவர்களுக்குரிய பாதுகாப்பை இஸ்லாம் உறுதி செய்கிறது

  •    'போர்க்கைதிகள் கொல்லப்படக்கூடாதென்பது முக்கிய விதி

  •    'கட்டிவைத்து எந்த ஒருவரையும் யுத்தத்தில் கொல்லக்கூடாது

  •    'எதிரி நாட்டில் கொள்ளையிடல் தடை செய்யப்பட்டுள்ளது

  •    'எதிரிகளின் உடைமைகள் புனிதம் பேணப்படல் வேண்டும்.

  •    'இறந்த சடலத்திற்கு மதிப்பளித்தல்

  •    'எதிரிகளின் சடலங்களை திருப்பிக் கொடுத்தல் அவசியம்

  •    'ஒப்பந்தங்களை எக்காரணம் கொண்டும் மீறுவது தடை செய்யப்பட்டுள்ளது.

  •    'போர் அறிவிப்பை செய்யாமல் தாக்குவது தடை செய்யப்பட்டுள்ளது

  •    'அழிவு வேலைகளில் இறங்குவது தடை செய்யப்பட்டுள்ளது

  •    'போர் வீரர்களின் உறுப்புகளைச் சிதைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

  •    'போராட்டத்தின் போது தூதுவர்;களைக் கொலை செய்வது தடை

  •    'நம்பிக்கைத் துரோகமிழைத்தல் தடை செய்யப்பட்டுள்ளது.

  •    'கட்டமைப்பு சிதைந்து போதல் தடை செய்யப்பட்டுள்ளது.

  •    'கூச்சல் கூப்பாடு, ஆரவாரம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது

  •    'மிருகத்தனமான நடைமுறைகளுக்கு எதிரான வழிகாட்டுதல்களுக்கு தடை
 

       இந்த ஒவ்வொரு வகையாக உரிமைகளுக்கும் அல்குர்ஆனிலும் நபி (ஸல்) அவர்களது அறிவிப்புக்களிலும், குலபாஉர்ராஷிதூன்களது அறிவுரைகளிலும், இஸ்லாமிய போராட்ட வரலாறுகளிலும் ஏராளமான ஆதாரங்களும், முன்னுதாரணங்களும் காணப்படுகின்றன. இஸ்லாமிய வரலாற்றை மீட்டிப்பார்த்தால், இந்த போராட்ட உரிமைகளை மீறி செயற்பட்டமைக்கான எந்த ஆதாரங்களையும் கண்டுகொள்ள முடியாது.

      ஆனால், இஸ்லாத்தின் மீது கால்ப்புணர்வு கொண்ட, நடுநிலை நின்று வரலாற்றை அனுகாத சிலர் இஸ்லாம் இரத்த வெறி கொண்ட மார்க்கம் என்ற அபாண்டத்தினை சுமத்துகின்றனர்.

     இஸ்லாம் மாத்திரம்தான் போராட்டத்தைத் தூண்டுகின்றதா? ஏனைய மதங்கள் அது பற்றி ஒன்றும் பேசவில்லையா!?  என்று சற்று நோக்கிப் பார்த்தால், ஏனைய சில மதங்களில் மிகக் கொடூரமான முறையில் உரிமைகளை மதிக்காது கூறக்கூடிய நிலையையும் நாம் அறிய முடிகிறது.

    இந்து மதம் அகிம்சையையும், துறவும் மட்டும் பேசும் மதமா!? அதன் ரிக் வேதத்தில் காணப்படும் போர்பற்றிய ஏராளமான வசனங்களுள் உதாரணத்திற்காக ஒன்றைக் குறிப்பிடுகிறேன்,

   'இந்திரனே! போற்றத்தகுந்ததும், வெற்றியின் மூலமாய் இருப்பதும் பகைவர்களைத் தாழ்த்துவதுமான திரண்ட செல்வத்தை எங்களுக்களிக்கவும்!

     நாங்கள் எப்போதும் பாதுகாப்போடு கைகலந்த போரிலோ, குதிரை மீது செய்யப்படும் சண்டையிலோ அச்செல்வத்தால் பகைவர்களை வெற்றி கொள்வோமாக!' ((1:8:1-2)

    சாமவேதத்தில் இது பற்றி குறிப்பிடும் போது,'வச்சிராயுதம் உள்ளவN! ஐசுவரியத்தை அளிக்கவும்.அறிவின் பகைவனைத் துரத்தவும். இந்திரனை பூஷனனை துரிதமாக போர்ச் செல்வங்களைக் கொள்ளையடிக்க பலமுடனாவதற்கு அழைப்போம்' (முதல் பாகம் 3:11:6,9)

    பகவத் கீதையைப் பொருத்தவரையில் அது ஆன்மீக நூலாக இருப்பினும் அதன் மையப் பொருள் போரேயாகும். இரத்தத்தைப் பார்த்து பயந்து ஒதுங்க நிiனைக்கும் ஒரு போர் வீரனை உத்வேகப்படுத்தும் ஒரு நூலாக அது காணப்படுகிறது. ஆரியர் பண்பாடு இந்தியாவில் முழுமையான வளர்ச்சியை அடைந்ததும், அஸ்தினாபுரத்தைமையமாகக் கொண்டு ஆட்சி புரிந்த அவர்களிடையே அதிகாரம், செல்வம் தொடாபாக ஏற்பட்ட பிணக்குகளும், பூசல்களும் ஆளும் வர்க்கம் கௌரவர்கள், பாண்டவர்கள் எஎன இரண்டு பிரிவாகப்பிரிந்தது. சமாதான முயற்சிகள் யாவும் தோற்றுப்போன பின்பு வாட்கள் மூலமாகத்தான் தீர்ப்பு ஏற்படும் என்ற நிலையில் இரு தரப்பினரும் போரில் குதித்தனர். அதனை மையப் பொருளாகக் கொண்டே அவ்வேதம் அமையப் பெற்றுள்ளது.

     அதேபோன்று, மனு தர்ம சாஸ்திர நூலைபட பொருத்தவரையில், இந்தியாவில் ஆரியர் முழு அதிகாரத்தையும் பெற்று, பண்பாடு, கலாசாரம் போன்றவற்றில் தமது மேலாதிக்கத்தை நிலைநாட்டிய பின்பு தொகுக்கப்பட்ட சட்ட நெறிமுறை நூலே மனு தர்ம சாஸ்திர நூலாகும். எனவே, இந்நூலில் போர் குறித்த எல்லா வகையான சட்டவிதிகளையும் பார்க்க முடியும்.

    யூதர்களின் தவ்றாத் வேதத்தைப் பொருத்தவரையில், தவ்றாத் வேதம் நெடுகிலும் போரைப் பற்றிய சட்டங்களே காணப்படுகின்றன. பல இடங்களில் போரிடுமாறு கட்டளையிட்டுள்ளது. ஆனால், இரண்டே இரண்டு இடங்களைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் போருக்கான காரணத்தைக்கூட கூறப்படவில்லை. இதனை அவர்களது வேதத்தில், சட்டம். அத்தியாயம்:2, 33 ஆகியனவற்றில் காணலாம். இவ்வேதத்தில் போர் பற்றி கூறும் வசனங்களுக்கு உதாரணமாக, 'இப்பொழுது எழுந்து பயணமாகுங்கள்! அர்னோன் ஓடையைக் கடந்து செல்லுங்கள்! இதே எமோரியனும், எஸ்போனின் அரசனுமாகிய சீகோனையும் அவனது நாட்டையும் உங்களிடம் கையளித்துள்ளேன். அதனை உடைமையாக்கிக் கொள்ள அவனோடு போராடுங்கள்!' (2:24)

     கிருஸ்துவத்தின் விவிலிய நூலின் பழைய ஏற்பாட்டில் பின்வருமாறு கூறப்படுகிறது, 'நீர் ஒரு நகரத்துக்கு எதிராக போர் புரிவதற்கு அதன் அருகில் வந்தால் முதலில் சமாதானத்தைப் பிரகடனம் செய்யவும். அந்நகரம் பதிலுக்கு சமாதானத்தைப் பிரகடனம் செய்து உமக்கு அந்நகரத்தை திறந்துவிட்டால், அந்நகரத்திலுள்ள அனைவரும் உமது ஆட்சிக்குற்பட்டோராவர். ஆனால் அவர்கள் சமாதானப் பிரகடனம் செய்யாது உமக்கெதிராக போர்ப்பிரகடனம் செய்தால், நீர் அந்நகரத்தை முற்றுகையிடுதல் தகும். தொடர்ந்து இறைவன் அந்நகரத்தை உம் கைக்குள் தந்ததும், அங்குள்ள ஒவ்வொரு ஆணையும் உம் வாளினால் தாக்குக. எனினும், அந்நகரத்திலுள்ள பெண் குழந்தைகள், கால் நடைகள், ஏனைய பொருட்கள் அனைத்தையுளும் நீர் எடுத்துக் கொள்க. அவ்வாறு இறைவன் உமக்குத் தந்த எதிரிகளின் பொருட்கள் அனைத்தையும் நீங்கள் உண்ணலாம். இவ்வாறு, இந்நாடுகளைச் சாராத தூர இடங்களிலுள்ள நகரங்களுக்கும் இது பொருந்தும். ஆனால்;, இறைவன் இவர்களுக்கு வாரிசாகக் கொடுத்த நகரங்களிலுள்ள எதனையும் விட்டுவைக்க வேண்டாம். அவற்றையெல்லாம் அழித்து விடுக!'

      இவ்வேத வசனங்கள் மிகத் தெளிவாக சொல்லும் விடயம், யுத்தம் மேற்கொள்ளும் சந்தப்பங்களின்போது இஸ்லாம் முன்வைத்துள்ள உரிமைகள் எதுவும் இவ்வேதங்களில் குறிப்பிடப்படவில்லை. மாறாக, இஸ்லாத்தை விமர்சிக்கும் இத்தகையவர்களது போர் நடவடிக்கைகளின் போது தீவிரமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதையும் காணலாம்.

    அந்தவகையில், இஸ்லாம் முன்வைத்துள்ள போர்ச்சட்டங்களில் பேணப்படும் மனித உரிமைகளைப் போன்ற பரிபூரணத்துவமும், மனிதாபிமானமும் மிக்க உரிமைகளை வேறெங்கும் காண முடியாது.

முடிவுரை

    இஸ்லாம் முன்வைத்துள்ள மனித உரிமைக் கோட்பாடானது சமுகத்தின் தனிமனிதன் முதல், சமுக வாழ்வின் அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கியதாக  காணப்படுகின்றது. இஸ்லாத்தின் மனித உரிமைக் கோட்பாடானது, மேற்கத்தைய கோட்பாட்டிலிருந்து முற்றுலும் வேறுபட்டது. காரணம், அது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. மாறாக, படைத்த இறைவனால் மனிதன் கேட்காமலேயே அவனது நலன்காக்க வழங்கப்பட்டதாகும்.

    இஸ்லாத்தின் மனித உரிமைக் கோட்பாடானது ஒரு முஸ்லிமின் ஆன்மீக வாழ்வுடன் பின்னிப் பிணைந்து காணப்படுவதாலும், அவை அவனது மறுமை வாழ்வுடன் தொடர்பு படுவதாலும், மேற்கத்தையர்களைப் போன்று அவர்களுக்கு சார்பானவர்களுடன் உரிமை பேனுவதும், மற்றையவர்களுடன் உரிமை மீறுவதும் முஸ்லிம்களைப் பொருத்தவரையில், முடியாத ஒன்றாகும்.

     இன்று ஐ.நா. சபையின் மனித உரிமைப் பிரகடனம் உலகின் வல்லரசுகளது, குறிப்பாக, அமேரிக்காவில் நலன்காப்பதற்கும், அதன் ஆதிக்கத்தை சர்தேசவளர்முக நாடுகளில், குறிப்பாக, இஸ்லாமிய நாடுகளில் தினிப்பதற்காகவும் அயராது உழைத்துக் கொண்டிருக்கின்றன.

     உலகில் தோன்றிய மனித உரமைப் பிரகடனங்கள், இறை நம்பிக்கையின், இறையச்சத்தின், மறுமை பற்றிய விசுவாசத்தின், ஆன்மிக பரிமானத்தின் அடிப்படையில் அமையப் பெறாமல், வெறும் மனித சிந்தனையின் அடிப்படையில் உருவானமையால், அவர்களால் உருவாக்கப்பட்ட ஏனைய சட்டங்களைப் போல நிறைய குறைபாடுகளும், ஏனைய சட்டங்கள் போலவே அடிக்கடி மாற்றங்களுக்குள்ளாகும் அம்சங்களாகவே காணப்படுகின்றன. மாத்திரமன்றி, மனித சமுதாயத்தின் அழிவுக்கே அவை காரணங்களாகின்றன.

     எனவேதான் கலாநிதி De.Santillana அவர்கள் 'சட்டமும் சமுதாயமும்' (Law and Society) என்ற தனது கட்டுரையில் குறிப்பிடும் போது, 'முஸ்லிம் சட்ட அறிஞர்கள், 'சட்டத்தின் அடிப்படை'சுதந்திரம் எனக் கூறும்போது, நாங்கள் தயக்கமின்றி இக்கருத்தோடு உடன்படலாம். நியாயமான சுதந்திரத்தை சாத்தியமாக்குவதற்காக இறைவன் மனிதனின் செயற்பாடுகளுக்கு ஒரு எல்லையையும் வரம்பையும் ஏற்படுத்தியுள்ளான். இறைவன் வகுத்துள்ள இந்த வரம்புகளின்றி சுதந்திரம் என்பது உரிமையின் துஷ்பிரயோகமாக மாறிவிடும். இது இவ்வாறு துஷ்பிரயோகம் செய்பவனையும், அவன் ஓர் அங்கமாக சமுகத்தையும் சேர்த்து அழித்துவிடும். இந்த நிலை ஏற்படாதிருக்க இறைவன் வகுத்துள்ள எல்லையே சட்டமாகும்'.

    அந்தவகையில், இறைவனால் இற்றைக்கு 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட மனித உரிமைப் பிரகடனத்தின் சுருக்கமே இக்கட்டுரையாகும் உண்மையில், இஸ்லாம் முன்வைத்துள்ள மனித உரிமைகள் தொடர்பாக ஆராய்வதென்பது ஒவ்வொரு உரிமை தொடர்பாகவும் ஆதாரங்களுடன் விரிவாக ஆராய்வதற்கு இந்த சிறிய கட்டுரை இடம்தரமாட்டாது. ஒவ்வொரு தலைப்பும் மிக விரிவாக ஆராயப்பட வேண்டிய தலைப்புகளாகும்.

     எனவே, இஸ்லாம் முன்;வைத்துள்ள மனித உரிமைகள் தொடர்பான ஒரு தொட்டுக்காட்டலே இந்த கட்டுரையாகும். உண்மையில், இந்த கட்டுரை மனித உரிமை தொடர்பான விரிவான, விமர்சன ரீதியான தேடலுக்கு தூண்டும் முயற்சியாக அமைய பிரார்த்திக்கிறேன்!

உசாத்துணைகள்
01. மௌதூதி, அபுல் அஃலா, இஸ்லாத்தில் மனித உரிமைகள் (மொழிபெயர்ப்பு)
   முதல் பதிப்பு, 1986, இஸ்லாமிக் நிறுவனம் ட்ரஸ்ட் வெளியீடு, சென்னை.

02. கலாநிதி. சுக்ரி, எம்.ஏ.எம்., இஸ்லாமும் மனித உரிமைகளும், முதல் பதிப்பு,
   1995, நளீமியா இஸ்லாமிய வெளியீட்டுத் தினைக்களம், பேருவலை.

03 அப்துல் ஹஃபீஸ், இஸ்லாத்தில் உரிமைகள் கடமைகள், முதல் பதிப்பு,          1991, இஸ்லாமிக் பவுன்டேஷன் டிரஸ்ட் வெளியீடு, சென்னை.

04 செல்லப்பா, கொடிக்கால், புறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி, முதல் பதிப்பு,  2002, இலக்கியச் சோலை வெளியீடு, சென்னை.

05. மௌதூதி, அபுல் அஃலா, ஜிஹாத் ஓர் இஸ்லாமியப் பார்வை (தழிழாக்கம்)
   முதல் பதிப்பு, 2008, திண்ணைத் தோழர்கள் பதிப்பக வெளியீடு, தழிழ்நாடு.

06. முஹம்;மது கான் பாகவி, அ, இஸ்லாத்தின் மீதான விமர்சனங்களும் விளக்
   கங்களும், முதல் பதிப்பு, 2006, கிராபிக் பார்க் வெளியீடு, சென்னை.

07. டாக்டர். ஜாகிர் நாயக், இஸ்லாம் வழங்கும் பெண்றுரிமைகள், முதல் பதிப்பு,
   2008, சாஜிதா புக் சென்டர் வெளியீடு, சென்னை.

08. ஜைனுல் ஆபிதீன், பீ, இஸ்லாம் குற்றச்சாட்டுக்களும், பதில்களும், ஐந்தாம்
   பதிப்பு, 2000, நபீலா பதிப்பகம் வெளியீடு, சென்னை.

09. Ahmed E. Souaiaia. Human Rights & Islam, The Divine and the Mundane in
       HumanRights Law, First Edition, 2003, University of Washington, New York.


10. ஜாமிஅதுல் மதீனா அல்ஆலமிய்யா, ஹூகூகுல் இன்ஸான் பில் இஸ்லாம், கிதாபுல் மாத்தா, ஜாமிஅதுல் மதீனா அல்ஆலமீய்யா வெளியீடு, 2009.

11.http://ta.wikipedia.org/wiki/மனித உரிமைகள்

No comments:

Post a Comment