Friday, April 6, 2012

இந்தியாவின் கல்வி, கலை வளர்ச்சிக்கு முஸ்லிம் மன்னர்களின் பங்களிப்புகள் 2

இந்தியாவின் கலை வளர்ச்சிக்கு முஸ்லிம் மன்னர்களது பங்களிப்புகள்.

Ash Sheikh. M.S.Riyaz Mohamed (Naleemi), M.A. , Dip.in. Edu.

    இந்தியாவில் கலை வளர்ச்சியில் முஸ்லிம் மன்னர்களது பங்களிப்பு அளப்பரியது. இன்றும் கூட கம்பீரமாய் காட்சிதரும் நினைவுச் சின்னங்கள் அதற்கு சான்றாகும். முஸ்லிம்கள் கவின்கலைகளான கட்;டடக்கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை, மற்றும் இசைக்கலை என்பனவற்றுடன் மருத்துவம், கணிதவியல், தத்துவவியல், விஞ்ஞானம் போன்ற அறிவியல் கலைகளையும் வளர்ப்பதில் அரும் பங்காற்றியுள்ளனர். அந்தவகையில்,  குறிப்பிட்ட சில கலைகளது வளர்சிக்கு அவர்களால் மேற்கொள்ளப்பட்ட பங்களிப்புக்களை  நோக்குவோம்.

 கட்டடக்கலைக்கு முஸ்லிம்களது பங்களிப்புகள் :
   இந்தியாவின் இஸ்லாமியக் கட்டடக் கலை ஸிரிய, பைஸாந்திய, எகிப்திய, ஈரானிய கலைப்பாணிகளின் கலவையாகும். அதன் விரிந்த அமைப்பில் ஹிந்து, ஜைன, பௌத்த கலையம்சங்களையும் பெற்று மிளிர்கிறது. அதன் நிர்மாணிகளில் சிலர் டில்லி சுல்தாகளாவர். மேலும் சிலர் வங்காளம், குஜராத், மால்வா, டெக்கான் ஆகிய பகுதிகளில் இருந்த முஸ்லிம் அரசர்களும், பிரபுக்களுமாவர். பிறப்பில் அவர்கள் துருக்கியராகவோ, ஆப்கானியராகவோ, ஈரானியராகவோ காணப்பட்டனர். இந்திய கட்டடங்களுக்கு பணிக்கமர்த்தப்பட்ட பெரியியலாளர்கள் பெரும்பாண்மையினர் ஈரானியரும், துருக்கியரும் இந்தியருமாவர். இங்கு பணிக்கமர்த்தபட்ட ஓவியர்கள், எழுத்தணிக்கலைஞர்கள் ஈரானியரும், ஆப்கானியரும், இந்திய முஸ்லிம்களும், இந்துக்களுமாவர். மொகலாயருக்கு முற்பட்ட காலத்தில் டில்லியைத் தலைநகராகக் கொண்டு விளங்கிய ஹிந்துஸ்தானிய இராச்சியத்திலும், ஜௌன்பூர், குஜராத், மால்வா, வங்காளம் ஆகிய இராச்சியங்களிலும் இஸ்லாமியக் கட்டடக்கலை வளர்ச்சி கண்டது.

   ஆரம்பகாலத்துக்குரிய இந்திய முஸ்லிம் கட்டடக்கலை சின்னங்களில் ஒன்று டில்லியில் உள்ள குதுப் மினார் ஆகும். இதன் ஸ்தாபகர் டில்லியின் முதல் சக்கரவர்த்தியான குதுபுத்தீன் ஐபக் ஆவார். இது ஒரு கோபுரமாகும். இக்கோபுரத்தின் 95 அடி உயரமான முதல்மாடியை இவர் கட்டுவித்தார். இவருக்குப் பின் வந்த இல்துமிஷ் இரண்டாவது மாடியை இணைத்தார். இது 51 அடி உயரமானது. பின்னர் 3ஆம், 4ஆம், 5ஆம் மாடிகள் பைரோஷ் ஷா துக்லக் காலத்தில்  கட்டப்பட்டன. முழுக் கோபுரத்தினதும் உயரம் 238 அடிக்கும் கூடியதாகும். இதன் கீழ்த்தட்டில் குதுபுத்தீன் ஐபக்கின் கல்வெட்டு காணப்படுகிறது. இரண்டாம், மூன்றாம் மாடிகளில் இல்துமிஷின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. முதல் 3 மாடிகளும் சிவப்புக் கற்களால் கட்டப்பட்டுள்ளன. மற்றைய பகுதிகள் சலவைக்கல் உள்ளிட்ட சிவப்பு மணற்கல்லால் ஆனவை. இதன் உச்சியை அடைவதற்கு உட்புறமாக 375 படிகள் காணப்படுகின்றன.

    குதுபுத்தீன் குதுப் மினாருக்கு பக்கத்தில் 'குவ்வதுல் இஸ்லாம்' என்ற மஸ்ஜிதை நிர்மாணித்தார். இது மெசபத்தேமியப் பாணியில் அமைந்துள்ளது. மத்தியில் தூண்களால் சூழப்பட்ட ஒரு முற்றத்தைக் கொண்டுள்ளது. இந்த கட்டிடத்திற்கான தூண்கள், தூண் தலையுறுப்புக்கள் என்பன ஹிந்துக் கோவிலிலிருந்து பெறப்பட்டவையாகும். இந்த மஸ்ஜிதின் மத்திய வில் வளைவு 53 அடி உயரமானது. இது இரு சிரிய வில் வளைவுகளால் தாங்கப்பட்டுள்ளது. அதிலுள்ள அலங்காரங்கள் இஸ்லாமிய அடிப்படையிலானவை. இல்துமிஷ் இப்பள்ளியை, மினாரைச் சுற்றி புறமுற்றம் ஒன்றை கட்டியதன் மூலம் விரிவுபடுத்தினார்.  அலாவுத்தீன் கில்ஜி இதனை மேலும் விசாலமாக்கிக் கட்டினார்.

     குதுபுத்தீன் ஐபக் அஜ்மீரிலும் ஒரு பள்ளியைக் கட்டினார். இதுவும் இல்துமஷினால் பூரணப்படுத்தப்பட்டது. இது டில்லி மஸ்ஜிதை பின்பற்றியதாக இருந்தாலும் அதனை விட மிக விசாலமானதாகவும், ஒரு புறத்தில் முற்றத்தையும் மூன்று பக்கங்களிலும் அகலமான மண்டபங்களையும் கொண்டுள்ளது. இதன் கூரை 5 தூண்களால் தாங்கப்பட்ட மிக அழகிய கும்மட்டத்தால் ஆனது. மிஹ்ராப் வட்டமான அமைப்பில் வெட்டப்பட்ட வெண்சலவைக்கல்லால் ஆனது.

      இன்றை இந்திய நாகரிகமும், பண்பாடும், கலாசாரமும், பன்முகத்தன்மையுடையதாகவும், ஒரு புதிய கலாசாரத்திக் வடிவமாகவும் தோற்றமளிக்கிறது என்று கூறினால் அதற்குக் காரணம் சுல்தான் அத்துமிஷின் கலை ஆர்வமும், கல்வித் தேட்டமுமேயாகும்.

      ஜெங்கிஸ்கானின் அடாவடித்தனங்களுக்குப் பயந்து பல்வேறு முஸ்லிம் நாட்டவரும் அல்துமிஷை நாடி வந்தபோது அவர்களுடன் பல நுனுக்கமான கைவினைக் கலைஞார்களும் வந்து பல இடங்களிலும் இந்தியாவில் குடியேறினர். இவர்களது வருகை இந்தியாவின் நுன்கலை வளர்ச்சிக்கு இன்றியமையாத பங்களிப்பை ஆற்றியுள்ளதை மறுக்க முடியாது.

 இல்துமிஷூக்கு பின் வந்த டில்லி சுல்தான்கள் ஒரு சில சின்னங்களையே கட்டியுள்ளனர். அவற்றுள் பால்பனின் கல்லறை மண்டபமும் ஒன்றாகும். இதனுடைய வில் வளைவுகள் முன்னைய கட்டடங்களில் இருந்ததை விட ஒருபடி மேலானதாகும்.

         கில்ஜி வம்சத்தை ஆரம்பித்த ஜலாலுத்தீன் கில்ஜி யமுனை நதிக்கரையில் ஒரு அழகிய பூந்தோட்டத்தோடு, பல அழகிய வீடுகளை நகர் முழுக்க கட்டி அதனை தலைநகராக்கிக் கொண்டார். இதுவே இன்றும் புதுடில்லி என்ற பெயரில் தலைநகரமாக விளங்குகிறது. 
  
     அலாவுத்தீன் கில்ஜி 'ஜமாஅத்கானா' என்ற ஒரு மஸ்ஜிதை நிர்மாணித்தார். அதனுடைய அமைப்பும், வேலைப்படுகளும் இஸ்லாமியத் தன்மை வாய்ந்தவை. இது சிவப்புக் கற்களால் கட்டப்பட்டுள்ளது. மூன்று மண்டபங்களைக் கொண்டது. இரு புறங்களும் செவ்வக வடிவிலான இரண்டு மண்டபங்களுண்டு. மத்தியில் சற்சதுர வடிவிலான மண்டபம் காணப்படுகிறது. இவை தனிப்பட்ட நுழைவாயில்களை உடையன. மத்திய மண்டபம் ஒவ்வொரு மூலையிலும் வில்வளைவுகளால் தாங்கப்பட்ட ஒரு கும்மட்டத்தால் கூரையிடப்பட்டுள்ளது. இந்த மஸ்ஜித் துக்லக் வம்ச ஆட்சியாளர்களாலும், பின்னர் அக்பராலும் புதுப்பிக்கப்பட்டன. பாகங்களின் பொருத்தம், சரியான அமைப்பு என்பன கில்ஜி மன்னர் கால இஸ்லாமிய கட்டடக்கலையின் விஷேட அம்சங்களாக விளங்கின.

     அலாவுத்தீன் கில்ஜி காலத்தில் கொத்தர் தச்சர் என்று ஏராலமான கலைஞர்கள் இருந்தனர். 7000 பேருக்கு எப்போதும் வேலை இருந்துகொண்டிருந்தது.  அவர்கள் செம்மையான குறித்த நேரத்தில் கட்டி முடிக்கும் தொழில் திறமையுள்ளோராக இருந்தனர். பள்ளிவாயில்கள், தியான மன்றங்கள், ஞானிகளின் ஆசிரமங்கள், மினார்கள், கோட்டைகள், மதில்கள் கட்டப்பட்டுக்கொண்டே இருந்தன.

      இஸ்லாமிய கட்டடக்கலையின் மற்றொரு எடுத்துக்காட்டாக விளங்கும் அலை - தர்வாசா வை அலாவுத்தீன் கில்ஜி நிறைவு செய்தார். நான்குபுறமும் வாசலும், நடுவில் சமாதியும் கொண்ட இது செந்நிற கற்காளால் கட்டப்பட்டது. தரை வெண்ணிற சலவைக் கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டது. சுவர்களில் வார்த்தைகள் வடிக்கப்பட்டுள்ளன. இதன் சிறப்பு குறித்து பேராசிரியர் 'வத்ஸவா பின்வருமாறு கூறுகிறார். ' இதன் அமைப்பு வடிவம், கலையம்ச வேறுபாடுகள் ஆகிய அனைத்தும் இதை ஒரு சிறந்த நினைவுச்சின்னமாக காட்டுகின்றன. இது முழுமைப் பெற்றிருந்தால் முஸ்லிம் ஆட்சியில் இந்தியாவில் உருவான மிகச்சிறந்த கட்டடமாக இது அமைந்திருக்கும்' என குறிப்பிடுகிறார்.

     அலாவுத்தீன் ' என்ற ஒரு மாபெரும் நகரையும் நிர்மாணித்தார். இது டெல்லியில் 7 நகர்களுள் இரண்டாவது நகராகக் கருதப்படுகிறது. கி.பி. 1303 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நகரில் 1000 தூண்கள் கொண்ட அரண்மனை அமைக்கப்பட்டது.

    துக்லக் மன்னர்கள் தமது கட்டிடங்களை எளிமையாக, ஆனால் பாரிய அமைப்பில் கட்டினர். முதல் துக்லக் மன்னர் கியாஸூத்தீனின் கல்லறை இதற்கு சான்றாகும். இது எழுவது அடி உயரமான சதுர வடிவுடையது. இவ்வம்சத்தின் மூன்றாவது அரசரான பைரோஸ் ஷா பெரும் தொகையான கோட்டைகள், மாளிகைகள், கால்வாய்கள், மஸ்ஜித்கள், கல்லறை மண்டபங்கள், என்பவற்றைக் கட்டுவித்தார். இவரது காலத்து கட்டிடங்கள் செப்பனிடப்படாத கற்களும், காரையும் பயன்படுத்தப்படுகிறது.

     இவரது காலத்தில் கட்டப்பட்ட மண்டபங்களுள் தமது வாழ்நாளிலேயே தமக்காக கட்டப்பட்ட கல்லறை மண்டபம் ஒன்றாகும். இது சற்சதுர வடிவில் அமைந்துள்ளது. லால் கும்பத் எனப்படும் கபீருத்தீனின் கல்லறை மண்டபம் முதலாவது துக்லக் மன்னனின் னல்லறை போன்று அமைக்கப்பட்டது. இரட்டைக் கும்மட்டங்களை உடைய சிக்கந்தர் லோடியின் கல்லறை ஷிஹாபுத்தீன் தாஜ்கானின் கல்லறை 'சோட்டா கும்பத்', 'ஷீஷ் கும்பத்' என்பன சாம்பல் நிறமான திண் பாறைகளாலான சுவர்களையும் எனாமல் பூசப்பட்ட ஓடுகளாலோ, அல்லது சிவந்த மனற்கற்களாலோ ஆன கூறைகளையும் உடையன. இவை துக்லக், லோடி, செய்யித் வம்ச அரசர்களால கட்டப்பட்ட நினைவுச் சின்னங்களுள் அடங்கும்.

     கியாசுத்தீன் துக்லக்கினால் கட்டப்பட்ட முல்தானிலுள்ள ருக்னே ஆலமின் கல்லறை எண்கோண வடிவிலானது. 115 அடி உயரமும், 90 அடி விட்டமும் உடைய இது ஈரானிய மாதிரியில் அமைந்ததாகும்.

      பைரோஜ் ஷா துக்லக் நாட்டின் பல பாகங்களிலும் கான்கா எனப்படும் ஞானியர் கூடங்களை நிறுவினார். டெல்லியிலும், பைரோஜஷாபாத்திலும் 120 சத்திரங்கள் வழிப்போக்கர்களுக்காக கட்டினார். பழங்கால நினைவுச்சின்னங்களை பாதுகாக்க முயற்சி மேற்கொண்ட இவர் பழங்கால நினைவுச்சின்னங்களை புதுப்பித்து மக்கள் சென்று பார்வையிட ஏற்பாடு செய்தார்.

     துக்லக் வம்சத்தினரின் வீழ்ச்சியை அடுத்து தில்லி முஸ்லிம் ராஜ்யம் சிறிய, பெரிய மாகாணங்களாக பிரிந்து போயின. மேற்கு வங்காள ராஜ்யம் , கிழக்கு வங்காள ராஜ்யம், மதுரை ராஜ்யம், காஷ்மீர் ராஜ்யம், சிந்து ராஜ்யம், ஜெலன்பூர், டெக்கான் என்பன  இவற்றுள் அடங்கும். இவை பின்னர் 5 சிறிய நாடுகளாக பிரந்தன. அவையாவன பீஜாபூர், கோல்கொண்டா, பதார், அஹ்மத் நகர், பிரார், குஜராத் இந்நாடுகள் ஒவ்வொன்றிலும் இஸ்லாமிய ஆட்சி நிலவியமைக்கான சின்னங்கள் பல இன்றும் காணப்படுகின்றன.

    இந்நகர்களில் காணப்படும் முக்கிய கட்டிடங்களாக பின்வருவனவற்றை குறிப்பிட முடியும். பைரோஷ் ஷா துக்லக்கினால் நிர்மாணிக்கப்பட்ட ஜௌன்பூர் பனாரஸ் நகரிலிருந்து 50 மைல் தூரத்தில் அமைந்துள்ளது. கி.பி. 1394 இல் ஷர்கி என்று அழைக்கப்பட்ட வம்சத்தினரின் ஆள்புலமாக விளங்கியது. இப்பகுதியைச் சேர்ந்த மிகச் சிறந்த கட்டிடக்கலைச் சின்னங்களிற் பெரும்பாலானவை சிக்கந்தர் லோடியால் சேதப்படுத்தப்பட்டன. அழிவுக்குள்ளாகாது எஞ்சியுள்ளவற்றுள் 'அட்டாலா' எனப்படும் மஸ்ஜித் முக்கியமானது. கி.பி.1377 இல் காமிலகான் என்பவரால் தொடங்கப்பட்ட இம்மஸ்ஜித் 1408 இல் இப்றாஹீம் ஷா ஷர்கியால் பூர்த்தி செய்யப்பட்டது. இது இஸ்லாமிய கட்டடக்கலைப் பாங்கினை ஒட்டி அமைந்தாலும் இதனது உள்ளகப்பகுதிகளும் சற்சதுர வடிவான தூண்களும் ஹிந்துக் கலைப்பாங்கனை பிரதிபலிக்கின்றன.

    கீழை இந்திய இஸ்லாமிய கட்டடக்கலையின் பிரதான அம்சங்களாவன பாரமான கற்றூண்கள், கூறான மாடவிற்கள், செங்கல்லாலான கவிகை மாடங்கள் என்பனவாகும். மேற்றள அலங்காரத்திலும் கூடிய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. கட்டடம் இந்து- முஸ்லிம் கலைப்பாங்கினைப் பிரதிபலிக்கும். இந்தப்பாணியில் கட்டப்பட்ட கட்டப்பட்ட கட்டிடங்களுள் அதீனா மஸ்ஜிதும் ஒன்று. இது பந்துவா எனும் இடத்தில் அமைந்துள்ளது. 507 1/2 x 285 1/2 அடி அளவிலானது. இது வில் வளைவுகளோடு கூடியதாக பிமாண்டமான செவ்வக வடிவில் கட்டப்பட்டுள்ளது. கும்மட்டத்தால் கூரையிடப்பட்ட வில் வளைவுகள் கவிந்துள்ள 88 வளிகள் இதில் காணப்படுகின்றன. கூடங்கள் தூண்களைக் கொண்ட வில்வளைவு வரிசைகளால் ஆனவை. இதனால் இக்கட்டிடம் கவர்ச்சியுடையதாகத் தோற்றமளிக்கிறது. இதனுடைய மிஹ்ராப் அழகிய வடிவில் குடைந்தமைக்கப்பட்டுள்ளது.

      ஜலாலுத்தீன் முஹம்மத் ஷாவின் கல்லறையும் குறிப்பிடத்தக்கதோர் கட்டிடமாகும். இது 75 சதுர அடி பரப்பில் அமைந்துள்ளது. இது செங்கல்லால் கட்டப்பட்டதாகும். ஒரு கும்மட்டத்தால் ஆன இதன் கூரை ஒரு வகையான வில் வளைவுகள் மீது அமைந்துள்ளது. இதன் மேற்றள அலங்காரங்கள் கவர்ச்சிவாய்ந்தனவாக உள்ளன. குறிப்பிடத்தக்க மற்றைய கட்டிடங்களுள் ஒன்று 'தாக்கில் தர்வாஸா' (நுழைவாயில் ) என்ப்படும் வில்வலைவுடன் கூடிய நடைவழியாகும். 60 அடி உயரமுடைய இது இரு புறங்களிலும் அறைகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. ஏனைய கட்டடங்களாவன, பகீடட் எனும் இடத்திலுள்ள சாத் கும்பத் மஸ்ஜித் (7 கும்மட்ட மஸ்ஜித்) , கானே ஜஹான் அலியின் கல்லறை, தந்தி பாரா மஸ்ஜித், :- இரட்டை நுழைவாயில்களை உடைய இது நீள் சதுர வடிவில் அமைந்துள்ளது. வங்காளத்தில்  கட்டப்பட்ட மிக அழகிய மஸ்ஜிதான இது தற்போது சிதைந்த நிலையில் காணப்படுகிறது. தரஸ்பாரி மஸ்ஜித், லத்தன் மஸ்ஜித் ஆகியன செங்கற்களால் கட்டப்பட்ட இவை, சற்சதுர வடிவான தொழுகைக்குரிய மண்டபத்தையும், வில் வளைவோடு கூடிய வராந்தாக்களையும் உடையன. இம்மஸ்ஜித்கள் பன்னிரமான மெருகிடப்பட்ட ஓடுகளால் அழுகுபடுத்தபட்டன. ஹூஸைன் ஷாஹ் (1423-1519) இன் காலத்தில் கோர் எனும் இடத்தில் கட்டப்பட்ட சோட்டா சோனா மஸ்ஜித், நஸ்ரத் ஷாஹ்வினால் கட்டப்பட்ட படாசோனா மஸ்ஜித் என்பன செங்கற்களாலும் கருங்கற்காளாலும் ஆனவை.

      முஸ்லிம்கள் இந்தியாவை வெற்றி கொள்வதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே குஜராத்தில் ஹிந்து கட்டடக்கலை நன்கு முன்னேற்றம் அடைந்திருந்தது. இஸ்லாமிய ஆட்சியின்போது ஆட்சியாளர்கள் தமது கட்டடங்களை அமைக்க உள்நாட்டு கட்டட மாதிரியையே பின்பற்றினர். தமது தேவைக்கு ஏற்ற விதத்தில் மட்டும் அந்த அமைப்பில் மாற்றங்களை செய்து கொண்டனர். எனவே, அவர்களது கட்டடக்கலை ஹிந்து, ஜைன, முஸ்லிம் மாதிரிகளின் களப்பாக விளங்கியது. கம்பே (1325) எனும் இடத்திலுள்ள பள்ளிவாசல் போன்ற சில கட்டடங்கள் ஹிந்து மாதிரியைப் பின்பற்றி அமைந்தவை. சர்தார் கான் மஸ்ஜத் (1680) போன்ற சில கட்டடங்கள் ஈரானிய மாதிரியைப் பின்பற்றி அமைந்த கட்டடங்களாகும். குஜராத் முஸ்லிம்களால் அமைக்கப்பட்ட கட்டடங்கள் கூரான மாடவிற்கள், கும்மட்டங்கள் என்பவற்றின் மீது அவர்களுக்கு இருந்த விருப்பத்தை எடுத்துக்காட்டுகின்றன.

       அஹமத் ஷாஹ் தமது வம்ச ஆட்சியை குஜராத்தில் ஸ்தாபித்த போது அஹமதாபாத் நகரத்தை நிறுவி அதனை தனது தலைநகராக ஆக்கிக் கொண்டார். இவரது கட்டடங்களுள் தீன் தர்வாசா (மூன்று வாயில்கள்) குறிப்பிடத்தக்கதாகும். இது அஹமதாபாத்தில் அவரது மாளிகை முற்றத்தில் அமைந்துள்ளது. இந்நுழைவாயில் அழகியதாகவும், சரிநுட்பமானதாகவும் உள்ளது. இவரது ஜூம்ஆ மஸ்ஜித் மற்றொரு அழகிய நிர்மாணமாகும். இது 260 அழகிய தூண்கள் உள்ளன. இதனுடைய குறுகளான இடைக் கழிகள் ஹிந்து மாதிரியிலான கும்மட்டங்களைக் கொண்டிருக்கின்றன. சுல்தான் அஹமதின் கல்லறை ஒரு கும்மட்டத்தைக் கொண்ட பாரிய சற்சதுர வடிவக் கட்டடமாகும். இதற்கு நான்கு மண்டபங்கள் உள்ளன. இவை நேர்த்தியான தூண்களால் தாங்கப்பட்டும், சிறிய கும்மட்டங்காளால் கூரையிடப்பட்டும் உள்ளன. தர்யாகானின் (1453) கல்லறை மத்தியில் உயரமான கும்மட்டத்தையும் தாழ்வாரங்களுக்கு மேலால் சிறிய கும்மட்டங்களையும் கொண்ட சற்சதுரமான கட்டடமாகும். இது ஈரானியப் பாணியில் கட்டப்பட்டுள்ளது.

         முஹம்மத் ஷாஹ் பெகோடாவின் நீண்ட ஆட்சிக்காலத்தில் குஜராத்தில் இஸ்லாமியக் கட்டடக்கலை பெரிதும் முன்னேற்றமடைந்தது. கோட்டைகள், மாளிகைகள், பள்ளிவாசல்கள் என்பவற்றை உள்ளிட்ட பல நகர்களை இவர் நிர்மாணித்;தார். அவர் முஹம்மதாபாத்தை தனது தலைநகராகக் கொண்டார். அங்கே ஏனைய கட்டடங்களோடு ஒரு ஜூம்ஆ மஸ்ஜிதையும் நிர்மாணித்தார். அமைப்பில் எளிமையானதான சீதி சைத் மஸ்ஜித் அவரது ஆட்சிக்கால பிரிவிற்குரிய முக்கிய நினைவுச்சின்னமாகும். இம்மஸ்ஜித் அழகிய ஜன்னல் மறைப்புக்களோடு கூடிய சற்சதுர வடிவிலான தூண்களால் தாங்கப்பெற்ற வில் வளைவுகளுடையது. அழகிய ஜன்னல் மறைப்புக்கள் ஒரு புதிய கட்டடக்கலைப் பாணியாகும். இந்த மறைப்புகள் அவற்றின் பூ வேலைப்பாடுகளுக்காக குறிப்பிடத்தக்கனவாக உள்ளன எண்கோண வடிவிலான இரு மினராக்கள் மஸ்ஜிதின் முன்பக்க மூலையில் அமைந்துள்ளன. 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அபூ துராபின் கல்லறை மண்டபம் எல்லாப்பக்கங்களிலும் வில் வளைவுகளோடு கூடியதாக உள்ளது. மத்திய கும்மட்டம் ஒன்றையும், சிறிய கும்மட்டங்கள் பலவற்றையும் இது கொண்டுள்ளது. 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட முஹாபிஸ்கான் மஸ்ஜித், ஹிந்து-முஸ்லிம் கட்டடக்கலையின் கலப்பு வடிவமாக தோற்றமளிக்கின்றது.

      தார், மன்டோர் பகுதிகளில் கில்ஜி பரம்பரையினால் கட்டப்பட்ட ஹன்டோலா மாளிகை 100 ஒ 60 அடி அளவுடைய இம்மாளிகை சிலுவை வடிவில் கட்டப்பட்டுள்ளது. இதன் முற்பகுதி தர்பார் கூடும் இடமாகவும் பல அறைகளைக் கொண்டிருந்த மிகுதிப் பெரும்பகுதி அந்தப்புறமாகவும் பயன்படுத்தப்பட்டது. இதனுடைய சுவர்கள் எளிமைவாய்ந்ததாக இருந்தாலும், இதன் மாடவில் வளைவு வழிகளாலனவை, பின்னோக்கி சாய்வுறும் பகுதிகள், யன்னல்கள், அகலமான இணைப்பு வளைவுகள் என்பனவற்றுடன் இசைவுப் பொருத்தமுடையனவாக விளங்குகின்றன.

    மற்றொரு கட்டடம் ஜூம்ஆப் பள்ளிவாசலாகும் இதக் அமைப்பு முறை எளிமையானது. 288 அடி வரை நீண்டு செல்கிறது. ஆனால் அதன் 102 சதுர அடி பரப்புடைய உள்ளக மண்டபமானது மாடவிற்களைக் கொண்ட 11 தூண் இடைவெளிகளால் சூழப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடைவெளியும் சிறிய கும்மட்டத்தால் மூடப்பட்டுள்ளது. தொழுகைக்குரிய கூடம் மிகப் பெரிய 3 கும்மட்டங்களால் கூரையிடப்பட்டுள்ளது.

      அடுத்து ஆட்;சிபீடமேரிய கில்ஜிவம்சம் மலிக் முஹிஸின் தகப்பன் அழகிய பள்ளிவாசல் ஒன்றை மால்வாவில் நிர்மாணித்தார். அதனோடு இணைந்ததாக ஒரு கல்லூரியையும், தனது குடும்பத்திற்கான கல்லறை மண்டபம் ஒன்றையும், வெற்றி கோபுரம் ஒன்றையும் கட்டினார். இவரது கல்லறை மண்டபம் வென்சலவை கற்களால் கட்டபட்டு ஏனைய கற்களால் அலங்காரம் செய்யபட்டது. அவரால் நிர்மாணிக்கப்பட்ட கல்லூரி மாடவிற்களை அடக்கிய தூண் வரிசையால் மறைக்கப்பட்ட பல அறைகளைக் கொண்டிருந்ததாக் தோன்றுகிறது. இதற்கு சமீபமாகவே ஃஹபத் மன்ஸில் ( 7 மாடி வீடு) என்கூறப்பட்ட வெற்றிக் கோபுரம் அமைக்கபட்டிருந்தது. துரதிஷ்டவசமாக இவை தற்போது சிதைவடைந்த நிலையில் உள்ளன.

       மால்வாவிலும், அதற்குப் பக்கத்திலுமுள்ள மாகாணங்களிலுமுள்ள ஏணைய முக்கிய இஸ்லாமிய கட்டடச் சின்னங்களாக பின்வருவனவற்றைக் கூறலாம்.மண்டேயில் உள்ள ஜஹாஸ் மஹால், பாஸ் பகதூர் மாளிகை, தாரிலுள்ள லால் மஸ்ஜித், பயானா எனும் இடத்திலுள்ள உக்கா மஸ்ஜித், ஜோத்புரிலுள்ள ஷம்ஸ் மஸ்ஜித், ஷம்ஸி ஈத்காஹ் போன்றன குறிப்பிடத்தக்கவைகளாகும்

        இவை தவிர கஷ்மீரில் சிக்கந்தர் படுஷாகின் (1390-1414) என்பரால் கட்டபட்ட சிரி நகரிலுள்ள ஜூம்ஆ மஸ்ஜித் முதன்மையானது. இது மரத்தாலும், செங்கற்கலாலும் கட்டப்பட்டுள்ளது. இது வழக்கமாக பாணியில் அமைந்த ஒரு மஸ்ஜிதாகும். மற்றொரு மஸ்ஜிதான சிரி நகரிலுள்ள ஹமதான் ஷா மஸ்ஜித் மரத்தால் கட்டப்பட்டதாகும். அமைப்பில் எளிமையானது. சற்சதுர சடிவிலான கூடத்தையுடையது.

        டெக்கானில் 14 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு கட்டப்பட்ட தௌலாபாத் கோட்டை (னுழரடயவயடியன) குறிப்பிடத்தக்கது. இது 600 அடி உயரமான கற்பாறையின் மீது

அமைந்திருக்கிறது. 14ஆம் நூற்றாண்டுக்குப் பின் நிர்மாணிக்கப்பட்ட பரேன்தா ( Pயசநனெயா) கோட்டையும் குறிப்பி;டத்தக்க கட்டடமாகும். டெக்கானிலுள்ள மிக வலிமையான கோட்டையாக கருதப்படும் இது பஹ்மானிய அரசரின் கீழ் பணிபுரிந்த ஈரானிய அமைச்சர் மஹ்மூத் கவான் என்பவரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

      1367 இல் கட்டப்பட்ட ஈரானிய பாணியிலான மஸ்ஜித் தூக்கி உயர்த்தப்பட்ட கும்மட்டங்களையும், குறுகலான கடைவாயில்களையும், உட்புறத்தில் மிக அகலமான மாடவிற்களையும் கொண்டதாக அமைந்துள்ளது. பள்ளியின் சுற்றுக்கட்டு வெளிடம் 4 மூலைகளிலும் உள்ள கும்மட்டங்கள் நீங்கலாள 63 கும்மட்டங்களை உடையது. தொழுகை மண்டபத்திற்கு மேலாக உள்ள கும்மட்டம் ஏனையவற்றை விட பெரியதாகும்.

       தௌலதாபாத்தில் அலாவுத்தீனால் கட்டப்பட்ட ஸார் மினார் (4 மினாராக்கள்) என்பதும் ஈரானிய அடிப்படையில் ஒப்பனை செய்யப்பட்டுள்ளது. இதற்கு சமீபமாக அலாவுத்தீனின் கல்லறை அமைக்கப்பட்டுள்ளது.

         மஸ்ஜிதுடனும், நூல் நிலையத்துடனும் கூடியதாக மஹ்முத் கவான் என்பவரால் கட்டப்பட்ட கல்லூரி ஸமர்கந்திலுள்ள கல்லூரி ஒன்றைப் பின்பற்றி அமைக்கப்பட்டதாகும். 365ஒ180 அடி பரப்புடைய இக்கட்டடம் மெருகிடப்பட்ட ஓடுகளால் அழங்கரிக்கபட்டுள்ளது. பிதாரில் முஹம்மத் ஷாஹ்வின் ஆட்சியின் போது கட்டப்பட்ட 16 தூண் பள்ளிவாசலும், மாளிகைகளும் இன்றும் நிலைத்து நிற்கின்றன.

        லால் கும்பத் (முஹம்மத் ஆதில் ஷாவின் கல்லறை மீது கவிழ்ந்துள்ள கும்மட்டத்துக்கு வழங்கப்படும் பிரபல்யமான பெயர்) இவ்வகையான கும்மட்டங்களில் உலகில் இரண்டாம் இடத்தைப் பெறுகிறது. இத்தோடு 8 மாடிகளைக் கொண்ட மினாரா போன்ற எண்கோண வடிவிலான 4 கோபுரங்களும் இக்கட்டடத்திற்கு உண்டு. டெக்கானிய கட்டடக்கலைச் சின்னங்களில் இது தலைசிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. இதனது பாரிய கும்மட்டத்தின் உள்ளக உயரம் 178 அடியாகும்.

      இந்திய கட்டடகலையில் மிகச் சிறப்பான ஒரு காலகட்டமாக முகலாயரது காலகட்டத்தினை குறிப்பிடலாம். அவர்கள் கட்டிய கோட்டைகளும், கல்லறைகளும், மாளிகைகளும், பள்ளிவாயில்களும் இன்றும் அவர்களது செல்வச் செழிப்பையும், சிறப்பான ஆட்சியையும், கட்டடக்கலையில் அவர்கள் கொண்டிருந்த நாட்டத்தினையும் உலகிற்கு பறை சாற்றும் அடையாளங்களாக விளங்குகின்றன.

     வரலாற்றாசிரியர் பெர்ஸி ப்ரௌன் ( Pநசஉல டீசழறn) முகலயர்களது கட்டடக்கலை பற்றி கூறும் போது,' மொகலாயர்களைப் போல் கட்டடக்கலையைப் பேணி வளர்த்தவர்களை வரலாற்றில் காண்பதரிது' எனக்குறிப்பிடுகிறார்.

      முகலாய முதன் மன்னன் பாபர் தான் இந்தியாவில் காண நேர்ந்த கட்டிடங்கள் அழகற்றவை என தனது நினைவுக் குறிப்புகளில் எழுதுகிறார். அவர் இந்திய சிற்பிகளை திறமையற்றவர்களாகக் கருதினார். தனது கட்டடங்களைக் கட்டுவதற்கு கொன்ஸ்தாந்து நோபிலிலிருந்து புகழ்மக்க கட்டடக்கலைஞர் சினான் என்பவரை வரவழைத்தார். ஆனால் பிற்காலத்தில் இந்திய கட்டடக்கலைஞர்களைக் கொண்டே பல கட்டிடங்களைக் கட்டி முடித்தார். ரோஹில்கண்டிலுள்ள சாம்பல் எனுமிடத்திலுள்ள ஜூம்ஆ பள்ளியும், பானிப்பட்டிலுள்ள 'காபூக் பாக்' எனும் பள்ளிவாசலும் குறிப்பிடத்தக்கன. ஆக்ராவில் தான் கட்டிக்கொண்டிருந்த கட்டடத்தில் தினமும் 680 கொத்தர்களும், சிக்கி, பயானா, குவாலியர் ஆகிய பகுதிகளில் தான் கட்டி வந்த கட்டிடங்களில் தினமும் 1500 கொத்தர்களும் பணியாற்றியதாக பாபர் தனது நினைவுக் குறிப்பில் எழுதியுள்ளார்.

        வாழ்;க்கை முழுவதும் இன்னல்களை அனுபவித்த ஹூமாயுன் கூட பல அழகிய கட்டடங்களை கட்டியுள்ளார். பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஹிஸார் மாவட்டத்திலுள்ள பதேகாபாத் எனும் இடத்தில் கட்டப்பட்ட மஸூதி, டெல்லியிலுள்ள தின்பனா மாளிகை என்பன ஹூமாயுகால் கட்டப்பட்டவையாகும். அவர் பாரசீகக் கட்டடக் கலை நுனுக்கங்களை மிகுதியாகப் பயன்படுத்தினார். பாபருக்கும், ஹூமாயுனுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஷெர்ஷாவினால் பல கட்டடங்கள், அரண்கள் இந்திய மரபில் கட்டப்ட்டது.

       ஹூமாயூனின் விதவை மனைவி ஹாஜி பேகத்தின் கட்டளையின் படி கட்டப்பட்ட ஹூமாயுனின் கல்லறை டெல்லியில் காணப்படுகிறது. தாஜ்மஹாலை ஞாபகப்படுத்தும் இக்கல்லறை சுற்றி இடம் விடப்பட்டு,  நான்கு புறங்களிலும் பெரிய எல்லைச் சுவர்களும், நான்கு நுழைவாயில்களும் கொண்ட இக்கல்லறை வட இந்திய கட்டடக்கலை வரலாற்றில் புதியதொரு அத்தியாத்தினையே தொடங்கி வைத்ததாக கூறப்படுகிறது.

 பேரரசர் அக்பர் ஆக்ரா, லாகூர், அலஹாபாத் அகுPயு இடங்களில், பாண்போர் வியக்கும் வகையிலாக மாபெரும் அரண்மனை, கோட்டைகளைக் கட்டினார்.அவை அனைத்தும் செம்மன் கற்கலால் கட்டப்பட்டவை. இவற்றுள் ஆக்ரா போட்டையே தலைசிறந்ததெனலாம். நெருப்பின் நிறமுடைய செம்மண் கற்களை இரும்பு வலையங்களை ஒரு தமையிர் கூட நுழைய முடியாதவன்னம் நெருக்கமாக இணைத்துக் கட்டப்பட்ட இதன் சுவர்கள் மிக்க உறுதியானவை. இக்கோட்டையினுள் வங்காள, குஜராத் பாணியிலான 500 இற்கும் மேற்பட்ட கட்டடங்களை அவர் கட்டியதாக அபுல் பாஸல் குறிப்பிடுகிறார். வெள்ளைச் சலவைக் கற்கள் மூலம் கட்டடங்களைக் கட்ட விரும்பிய ஷாஜஹான் இவற்றுள் பலவற்றை அழித்துவிட்டார்.

    எஞ்சியுள்ள கட்டடங்களுள் அக்பரி மஹாலும், ஜஹான்கீர் மஹாலும் குறிப்பிடத்தக்கவை. இவ்விரண்டும் ஒரே கட்டடத்திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டவை. சதுரமான முற்றத்தை மையமாக் கொண்டு, அதன் நான்கு பக்கங்களிலும் இரண்டு அறைகளை அமைத்துக் கட்டப்பட்டுள்ளன. வெளிப்றரத்தில் வெள்ளைச் சலைவைக் கற்களினால் ஒட்டு வேலைப்படுகள் செய்யப்பட்டுள்ளன. இதல் மயில் வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. வாகூர் அரண்மனைக் கோட்டையும் மிகப் nரியதாக அமைந்துள்ளது. இக்கோட்டையின் கட்டுமானத்தில் யானை, சிங்கம், மயில் போன்றவற்றின் வடிவங்கள் அதிகம் காணப்படுகினறன.

    அத்தோடு, கங்கை நதியும், யமுனை நதியும் சேருமிடத்தில் அலஹாபாத் கோட்டை அமைந்துள்ளது. 1583 ஆம் ஆண்டு கட்டிய இக்கோட்டை தற்போது பாலடைந்த நிலையில் காணப்படுகிறது.

     அக்பர் மன்னனின் கட்டடங்களில் சிறப்பு மிக்க மற்றுமொரு படைப்பு பதேபூர் சிக்ரியாகும். ஆக்ராவுக்கு 26 மைல் தொலைவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய தலைநகரே இதுவாகும். காட்டு விலங்குகளும், மிருகங்களும் சுற்றித்திரியும் இப்பகுதியில் ஒப்பற்ற அழகுமிகு கட்டிடங்களை கட்டி அமைச்சர்களை, அதிகாரிகளை குடியமர்தினார். அங்குள்ள மாளிகைகளும், மதில்களும் அங்கு தோண்டியெடுக்கபட்ட செந்நிற கற்களைக் கொண்டே கட்டப்பட்டவை. இந்நகர் ஏழு மைல் சுற்றளவுள்ளது. அதன் சுற்றுச்சுவரில் 9 வாயில்கள் இருக்கின்றன. இந்நகரிலுள்ள முக்கிய கட்டடங்களுள் ஷெய்க் ஸலீமின் கல்லறை, திவானிஆம், திவானிகாஸ், பீர்பால் மாளிகை, அபுல்பஸல் மாளிகை, மரியம் மாளிகை, ஜோத்பாய் மாளிகை  முதலானவை குறிப்பிடத்தக்கவைகளாகும். 

       இந்நகரத்தை ஒட்டியதாக அமைந்துள்ள பூலான் தர்வாஸா என்ற வாயில் குஸராத் வெற்றியின் நினைவாகக் கட்டபட்டதாகும். சலவைக் கற்களாலும் செம்மண் கற்களாலும் கட்டப்பட்ட இவ்வெற்றி வாயில் இந்தியக் கட்டடக் கலையின் முழுமையான வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு என்று மேனாட்டு கட்டடக்கலைஞர்கள் பாராட்டியுள்ளனர்.

     அடுத்து நூர்ஜஹான் தனது தந்தைக்காகக் கட்டிய கல்லறை சிறப்பான கட்டடக்கலைக்கு உதாரணமாக விளங்கியது. அதேபோன்று அக்பர் மன்னனின் கல்லறை 1605 இல் ஆரம்பிக்கப்ட்டு, 1612 வரை கட்டப்பட்ட 5 மாடி கட்டடம் மிக சிறப்பு மிகு உதராரமாக விளங்கியது.

     மெகலாயர் கட்டடக்கலையின் வளர்;ச்சி ஷாஜஹான் காலத்தில் உச்ச நிலையை அடைந்தது. தாஜ்மஹால், முத்துமஸூதி, செங்கோட்டை, திவானிஆம், திவானிகாஸ் ஜூம்ஆ மஸூதி ஆகியன ஷாஜஹானால் கட்டபட்ட சிறப்புமிக்க கட்டிடங்களாகும். இவையனைத்தும் ஜோத்பூரிலுள்ள மர்க்ரானா எனுமிடத்தில் வெட்டியெடுக்கபட்ட சலவைக்கற்களால் கட்டப்பட்டன.

       தன் மனைவி மும்தாஜ் நினைவாக ஷாஜஹானால் கட்டப்பட்ட தாஜ்மஹால் உலக அதிசயங்களுள் ஒன்றாக விளங்குகிறது. கி.பி. 1631 இல் தொடங்கப்பட்ட இக்கடட வேலைகள் கி.பி. 1653 ஆம் ஆண்டு வரை இடம் பெற்றன. இக்கட்ட வேலைக்காக தினமும் 20000 பேர் பணிபுரிந்தனர். அக்கால இந்தியாவில் மூன்று கோடி ரூபாய்கள் இதற்கான செலவிடப்பட்டது. உலகத்தின் பல திக்குகளிலிருந்தும் பல கைவினை மிக்க கட்டடக்கலை நிபுனர்கள் இதற்காக வரவழைக்கப்ட்டனர். தாஜ்மஹாலைத் திட்டமிட்ட பெறுமை ஷாஜஹானையே சாரும். இக்கட்டடமானது மொகலாயர் கட்டடக் கலையின் சிகரம் என குறிப்பிட முடியும். 

      யமுனை நதிக்கரையிலுள்ள தாஜ்மஹால் 1900 அடி நீளமும், 1000 அடி அகலமுமுள்ள  இடத்தில் சுற்றியும் எழில்மிகு பூஞ்சோலைகளுடன் அமைந்துள்ளது. தரை மட்டத்திலிருந்து 22 அடி உயரத்தில் அமைந்திருக்கும் 108 அடி உயரமுள்ள கல்லறையின் நான்கு மூலையிலும், நான்கு வெங்காய வடிவுள்ள குவிமாடங்களும், நடுவில் மிகப் பெரிய குவிமாடமொன்றும் அமைந்துள்ளது. சலவைக் கற்களால் கட்டப்பட்ட இன்றும் குன்றா எழிலுடன் விளங்கும் தாஜ்மஹாலை காணும் எவரும் வியந்து போற்றுவர்;. கால மாற்றத்திற்கேற்ப நிறம் மாறும் தன்மையுடையது தாஜ்மஹால். சூரியக்கதிர்கள் இதமாகப் படும் காலை வேளையில் சாம்பல் நிறமாகத் தோன்றும் தாஜ்மஹால், நன்பகலில் பலிச்சிடும் பால் நிறமாகவும், மாலை வேளையில் செந்தாமரையின் நிறமாகவும் மாற்றமடையக் கூடிய சிறபப்பு கொண்டது. வெண்ணிலாக்காயும் நேரத்தில் அதன் குவி மாடங்கள் மாபெரும் வெண்முத்துக்கள் போல் காட்சியளிக்கும்.

       இத்தகைய வியக்கத்தகு கட்டடக்கலை நுனுக்கங்களை  இந்தியவில் அறிமுகப்படுத்திய ஷாஜஹான் மற்றும் பல அற்புதமிக்க கட்டடங்களை இந்தியாவில் நிர்மாணித்தார். லாஹூரின் அருகிலுள்ள ஷாதாரா எனுமிடத்தில் இவரால் நிhமானிக்கபட்ட ஜஹான்கீரின் கல்லறை சிறப்பு மிக்கதாகும். தாஜ்மஹாலின் சிறப்பால் இதன்சிறப்பு குன்றியது.

       கி.பி.1638 இல் இவர் தனது தலைநகரை டெல்லிக்கு மாற்றியதால் டெல்லியில் பல எழில்மிக்க கட்டடங்கள் தோன்றின. டெல்லி அரண்மனைக் கோட்டை கம்பீரமும், வலிமையும் கொண்ட இந்திய முஸ்லிம் மன்னர்களின் கட்டடக்கலையின் சிறப்பை எடுத்துக்காட்டும் மற்றுமொரு முக்கிய கட்டடமாகும். அதேபோன்று, இவரது கட்;டடங்களில் அதிக அணிகலன்களோடு, அழகிய வண்ணக்கற்களை உட்புறம் கொண்டு அமைந்துள்ள திவானிகாஸ் குறிப்பிடத்தக்கது. அதிலுள்ள பாரசீகக் கல்வெட்டொன்று அதை,'மண்ணிலே காணும் விண்ணுலகம்' என்று கூறுகிறது.

   அதற்கருகில் காணப்படும் 'ரங்கமஹால்' அல்லது வண்ண மாளிகை பல வண்ணங்களுடன் பல வண்ணங்களுடனும் பளபளப்புடனும் திகழ்கிறது. அக்கால வரலாற்றாசிரியர் ஒருவர் இதன் சிறப்பு பற்றி கூறும்போது, 'விண்ணுலக மாளிகையையும் தன் எழிலால் இம்மாளிகை விஞ்சிவிடும்' என குறிப்பிடுகிறார்.

     அரண்மனைக் கோட்டையில் காணப்படும் மற்றொரு குறிப்பிடத்தக்க கட்டடம் திவானிஆம். இங்கு வேலைப்பாடுகள் குறைவு. காரணம், அரசர் இங்கு அரச அலுவல்களில் ஈடுபட்டார். பளபளப்பான எடுப்பான பல தூண்களைக் கொண்டமைந்த இக்கட்டடம் கட்டடக்கலையன் சிறப்பம்சத்தை பிரதிபளிக்கின்றது. அடுத்து இவரது படைப்பாக எளிமையும், தூய்மையும், கம்பீரமும் கொண்டு விளங்கும் முத்து மஸூதியாகும். ஷாஜஹானின் இதத்தகு சாதனைமிக்க கட்டடக்கலை வளர்ச்சியின் பின்பு அரசியலில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்கள், தொடர்ந்த போராட்டங்களின் விளைவாக இத்தகு எழில்மிகு  கட்டடங்களை காணக்கிடைக்கவில்லை ஆயினும் பின்தோன்றிய முஸ்லிம் ஆட்;சியாளர்கள் சில குறிப்பிடத்தக்க கட்டடங்களை கட்டி இந்திய கட்டடக்கலை வளர்ச்சியில் பங்காற்றினர்

      இவ்வாறு, பல்வேறு கட்டடங்களையும் உலகு வியக்குமளவவிற்கு கட்டி இந்திய கட்டடக்கலை வளர்ச்சியில் பெரும் பங்காற்றியோர் இந்திய முஸ்லிம் மன்னர்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது.

இசைக்கலை வளர்ச்சில் இந்திய முஸ்லிம் மன்னர்களது பங்களிப்பு

     இன்று இசைத்துறையில் பல்வேறு சாதனைகளைப் புரிந்து வரும் இந்திய இசைக் கலைஞர்களது இசைத்துறை ஈடுபாடானது வியக்கத்தக்க வகையில் முன்னேற்றம் கண்டு, எமது இளந்தலைமுறையினரை மட்டுமல்லாது வளர்ந்தோரையும் அதன் இனிமையால் வீழ்த்திவிட்டுள்ளது.  இத்தகு இசைக்கலையின் முன்னோடிகளாக முஸ்லிம்கள், குறிப்பாக முஸ்லிம் மன்னர்கள் இசைப்பிரியர்களாக இருந்துள்ளமையால் இசைக்கலை அரச ஆதரவுடன் வளர்ச்சி பெற்ற ஒரு கலையாக இந்திய வரலாற்றில் காணமுடிகிறது.

     முதலாக அடிமை சுல்தானாக விளங்கிய ஷம்சுத்தீன் அல்துமிஷ் காலத்தில் மொங்கோலியர் படையெடுப்புக்கு அஞ்சி உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல் துறை அறிஞர்கள் இந்தியாவை நோக்கி படையெடுத்தனர். அவர்கள் அனைவரையும் வரவேற்ற சுல்தான் அவர்களுக்கு பாதுகாப்பும், உயர் அந்தஸ்தும் வழங்னார். அந்தவகையில் அவர்களுடன் வந்தவர்களுள் சிறந்த புகழ்மிக்க இசைக்கலைஞர்களும்; இருந்தனர்.

    அடிமை சுல்தான்களின் முக்கிய ஆட்சியாளரான பால்பன் ஒரு சிறந்த இசைப்பிரியராக விளங்கினார். இவர் இசைத்துறை வளர்ச்சியின் பெரு ஆர்வம் காட்டியமையைப் பற்றி S.C. மிர்ஸா எனும் வரலாற்றாசிரியர் குறிப்பிடும் போது, ' பால்பன் இந்திய இசை இசையைப் பற்றி உயர்ந்த எண்ணத்திலிருந்தார். உலகில் உள்ள மற்ற எந்த நாட்டு இசையையும் விடவும் இது சிறந்தது என்பது அவரது கருத்து. ஈரானிய-இந்திய இசைக்கலையில் பல புதிய ராகங்களையும் அவர் கண்டறிந்தார்' எனக் குறிப்பிடுகிறார்.

    இளவரசர் புகராகான் சங்கம் அமைத்து இசையை வளர்த்தார் என இந்திய வரலாறு குறிப்பிடுகிறது. இவரது இந்த ஆர்வத்தைக் கண்டு கவரப்பட்ட பல பிரபுக்களும் இவரைப் பின்பற்றி கலைகளை ஆதரித்துள்ளனர் என்பதனை வரலாற்றாசிரியர் ளு.ஊ. ராய் சௌத்ரி குறிப்பிடுகிறார்.

     ஆரம்ப காலத்தில் இசைக்கலை வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டாத முஸ்லிம் மன்னர்கள் பின்னாலில் தமது எண்ணங்களை மாற்றிக் கொண்டு இந்திய இசை வளர்ச்சிக்கு தமது பங்கை சிறப்பாக ஆற்றினர் என்பதையும் அவர் மேலும் குறிப்பிடுகிறார்.

     கில்ஜிகளது வம்ச ஆட்சியை ஆரம்பித்து வைத்த ஜலாலுத்தீன் கில்ஜியின் காலத்தின் இசைக்கலைஞர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டமையால் பல சிறப்புமிக்க இசைக்கலைஞர்கள் அரசவையை அலங்கரித்துள்ளனர். கஜல் எனும் ஒருவகைப் பாடலை ஒவ்வொரு நாளும் அவையில் அமீர் குஸ்ரு பாடி அவையோரை மகிழ்விப்பார். கஜல் - சாஸ்திரிய இசையுலகிலும் பிரதான இடத்தினை வகிக்கும் ஒரு வகை இசையாகும். உயர் தனிப்பாணியுடையதாகும். இசைத்தேர்ச்சியில்லாதவர்களையும் இசைய வைக்கும் ஒரு வகையாகும். அத்தகு இசையினை வளர்ப்பதில் கரிசனை செலுத்தியோர் முஸ்லிம் மன்னர்களாவர்.

      லோடி மன்னர்களுள் சிக்கந்தர் லோடி இசைக்கலை வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினார். இவரது காலத்தில் தலைநகர் அரேபியா, ஈரான் புஹாரா போன்ற வெளிநாடுகளிலிருந்து வந்த அறிஞர்கள், சூபிகள், கவிஞகள், இலக்கியமேதைகள் என்பவர்களோடு, இசைக்கலைறுர்களும் எப்போதும் நிரம்பிக் காணப்பட்டது.

      ஜெய்தேவா என்ற புகழ்மிக்க இசைமேதை, பெரும் புலவர் இவரது காலத்தில் வாழ்ந்தவராவார். அவரது இசையுடன் கூடிய பாடல்கள் இன்றைக்கும் அழியாத ஓவியங்களாக நிலைத்து நிற்கின்றன. ';சங்கீத ரத்னகார்' எனும் இந்திய இசையைப்பற்றிய ஷாராங்க தேவ் இயற்றிய அரும்பெரும் நூல் இந்திய இசையைப்பற்றிய கலைக்களஞ்சியம் என்று அறிஞர் பெருமக்களால் போற்றப்படும் பெருமைக்குறியது இக்காலத்தில் உருவானதாகும்.

      நாதசுரம் வாசிப்பதில் சுல்தான் சிக்கந்தர் லோடிக்கு அலாதிப் பிரியம் இருந்தது. ஒவ்வொரு நாழும் அவரது தர்பாரில் இரவு 9 மணிவரை மேள வாத்தியங்கள் இசைக்கப்படும். அவருக்குப்பிரியமான நான்கு வகை ராகங்களை தினமும் இசைத்தனர்.

      துக்லக் மன்னர்களில் முஹம்மத் பின் துக்லக் இசையை நாட்டுப்புற இசை, நகரப்புற இறை என இசையை இரு வகையாகப் பிரித்து இரு வகை இசையும் வளர ஊக்கமளித்தார். இவர் தன் பங்கிற்கு எண்ணற்ற இசை விழாக்களை நடத்தி அதில் இந்து, இஸ்லாமிய இசை மேதைகளை அரங்கேற்றினார்.

       யூசுப் அடில்ஷாவின் மகனும், தந்தை வழியில் இசை ஆர்வலராக விளங்கினார். அவர் துருக்கிய பாரசிக இசையையும் பெரிதும் போற்றும் குணத்தவராக விளங்கினார். அகமது நகரை ஆண்;ட சுல்தானின் மகளான சாந்த் பீவி 16 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த இசை விற்பன்னராக விளங்கினார். வீணை மீட்டுவதிலும், கித்தார் வாசிப்பதிலும் இணையற்றவராக இவர் விளங்கினார்.

       பாபர் சிறந்த ரசிகராகவும், இசையை வளப்பவராகவும் திகழ்ந்தார். மனிதனை இசை மேன்மைப்படுத்துவதாக அவர் கருதினார். அவருக்குப் பின் ஹூமாயுனும் பாடகர்களை பெரிதும் மதித்து அவர்களுக்கு தமது அரசவையில் இடமளித்துப் போற்றினார்.

      மாமன்னர் அக்பரும் கூட இசைக்கலைஞர்களை பெரிதும் போற்றினார் என அபுல் ஃபஸல் குறிப்பிடுகிறார். அக்பரது காலத்தில் ஏழு இசைக்குழுக்கள் இருந்தன. அவை ஒவ்வொன்றும் வாரத்தில் ஒவ்வொரு நாளிலும் தனித்தனியே அக்பருக்கு இசைவிருந்தளித்தன என்பதையும் அபுல் ஃபஸல் குறிப்பிடுகிறார். அதேவேளை அக்பரே நகரா என்ற இசை முரசை இனிமையாக இயக்குவதாக அவர் மேலும் கூறுகிறார்.

       அக்பரின் காலத்தில் அவரது அரசவையில் ஆதிக்கம் செலுத்திய இசை மேதை தான்சேன் ஓராயிரமாண்டு தவமிருந்து வந்துதித்த இசைஞானி என அபுல் ஃபஸல் இவரைப் புகழுகின்றார். அவர் கணரா, மியாங்கி மகர், மியாங்கி சாரங் போன்ற புதிய இசை ராகங்களை இந்தியாவிற்கே அறிமுகப்படுத்தியவராவார்.

     தர்பார் ராகம், ஹயல் ராகமாக மொகலாயர் அரசவையில் ஆதிக்கம் செலுத்தியது. இவர்களது காலத்தில் பண்டரிக்கா வித்தால் என்பவர் இசைப்பாட நூல்களை படைத்துள்ளார். மீரா, சர்தாஸ், துளசிதாஸ் ஆகியோர் இவர்காலத்தில் வாழ்ந்த இசை மேதைகளாவர். மொகலாயர் காலத்தில் ஈரானிய இசையும் இந்திய இசையும் இணைந்து புதிய ராகங்கள் உருவாயின.

     மொகலாய மன்னர்களுள் மன்னர் ஜஹான்கீர் மற்றையோரை விட இசைத்துறையில் நாட்டம் கொண்டிருந்தார். இசைத்துறை வளர்ச்சிக்காக பெரும் அக்கறை செலுத்தினார். இவரது இசையரங்கில் ஜஹான்கீர் தத், பாவிஸ்தத், குர்ரமதத், ஹம்ஜான் சத்தூர் கான், போன்ற இசை மேதைகள் இசையை வளர்த்தனர்.

      வில்லியம் பிங்ச் என்ற ஆங்கிலச் சுற்றுப்பயணி ஜஹான்கீர் கால இசை வளர்ச்சி பற்றி குறிப்பிடும் போது, ''Many hundred of Musicians and dancing girls attended there day and night, yet as their several turns every seven days. tha they may be ready when the king or his women shall please to call any of themto sing or dance in his mahal, he giving to every one of them stipend according to their worth"  என  மானியம் வழங்கி இசைக்கலையை வளர்த்ததை சுட்டிக்காட்டுகிறார்.

      இவரைப் போன்றே மொகலாய மன்னர் ஷாஜஹானும் இசைக்கலை வளர்ச்சியில் பங்கு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரே ஒரு மிகச்சிறந்த பாடகராக விளங்கினார். அவரது குரல்வளம் மிவும் மிகவும் கவர்ச்சியானது என வியந்து பாராட்டுகிறார் பேராசிரியர் ஜே.என்.சர்க்கார். சுக்சென் என்ற கிதார் வாத்தியக் கலைஞரும், சுர்சென்ற என்ற கிதார் வாத்திய வல்லுநரும் இவர்காலத்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களைத் தவிர ஜகனாத், ராமதாஸ், மகபத்ரா போன்ற எண்ணற்ற இசைக் கலைஞர்களும் சக்கரவர்த்தியின் போற்றுதலுக்கும், பராமரிப்புக்கும் உள்ளானவாகளாக இருந்தனர். இவரது காலத்தில் அரசவையில் நூற்றுக் கணக்கான கலைவாணர்கள் இருந்தனர் என வரலாற்றாசிரியர் பிரெஞ்சு சுற்றுப்பயணி வில்லியம் பிஞ்ச் குறிப்பிடுகிறார்.

      மொகலாயர் காலத்திற்கு முன்பாகவே இசை இந்தியாவில் சிறப்பான நிலையை அடைந்திருந்தாலும், மொகலாயர்களது வருகையைத் தொடர்ந்து இசை புதிய வடிவம் பெற்றது எனக்கூற முடியும். ஒளரங்கசீப் காலத்தில் இசை ஒழிக்கபட்டதாக வரலாறு திரிக்கப்பட்டாலும், அவருக்குப் பின் வாழ்ந்த கடைசி மொகலாயர் கூட இசைக்கு உயிரூட்டியதாக இந்திய வரலாறு கூறுகிறது.

      இந்தவகையில் நோக்கும் போது இந்திய முஸ்லிம் மன்னர்கள் இசைக்கலை வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளனர் என்பது வெள்ளிடை மழையாகும்.

     ஓவியக்கலைக்கும் சிற்பக்கலைக்கும் உயரூட்டிய இந்திய முஸ்லிம் மன்னர்கள்.
     இந்திய முஸ்லிம் மன்னர்களது காலத்தில் ஏனைய கலைகளைப் போன்றே ஓவியக்கலையும் செழிப்புற்றது. முகலாயப் பேரரசர்கள் ஓவியக்கலையை செழித்தோங்கச் செய்தனர். இந்து ஓவியக் கலையுடன் பாரசீக ஓவியக் கலையுடன் இரண்டறக் கலந்து முகலாய அல்லது இந்துஸ்தான ஓவியக் கலை பிறந்தது.

       சீனா, யப்பான், பாரசீகம் முதலான நாடுகளின் ஓவியங்களில் குறிப்பிடத்தக்கது அவ்வோவியங்களின் கோடுகள் அழகாக நெளிந்து நெளிந்து அறுபடாமல் அமைந்திருப்பதாகும். ஆனால் இந்திய ஓவியங்களில் குறிப்பிடத்தக்க பளிச்சிடும் பல வண்ணங்கள் தான் என்று பெர்சி பிரௌன் குறிப்பிடுகிறார். இந்து ஓவியர்கள் பொதுவாகச் சைவ, வைணவ இலக்கியங்களில் வரும் கதா பாத்திரங்களை கவர்ச்சியாக வரைந்தனர்.

      மொகலாயர்கள் காலத்தில் காலத்தில் பொதுவாக அரசவைக் காட்சிகளும், வேட்டைக் காட்சிகளும் ஓவியங்களாகத் தீட்டபட்டன.

        மொகலாய மன்னர் பாபர் ஓவியக் கலையில் ஈடுபாடு கொண்டிருந்தார். கடுமையான போருக்குப்  பின்னரும் நேரம் போவது தெரியாமல் செடி கொடிகளையும், பறவைகளையும் கூர்ந்து கவனித்து இயற்கையின் விந்தைகளை கண்டுகழித்துக் கொண்டிருப்பார்.

        ஹூமாயுன் நாட்டையிழந்து பாரசீகத்துக்குச் சென்று வாழ்ந்திருந்த காலத்தில் அந்நாட்டு ஓவியக் கலையைக் கண்டு வியந்தார். இந்தியாவுக்குத் திரும்பும் போது மிர் செய்யத் அலி, குவாஜா அபதுஸ் ஸம் ஆகிய இரு ஓவியக் கலைஞர்களை தன்னுடன் கூட்டி வந்தார். அவ்விரு கலைஞர்களும் ஹூமாயூனுக்கும், அக்பருக்கும் ஓவியயக் கலையைக் கற்றுக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அக்பர் ஓவியக் கலைத்துறை ஒன்றைத் தனியே ஏற்படுத்தி குவாஜா அப்துஸ்ஸமதை தலைவராக்கினார். இந்தியாவிலும் இன்னும் பல நாடுகளிலும் வரையப்பட்ட அரிய ஓவியங்களை அக்பர் சேகரித்து வைத்திருந்தார். வாரமதோரும் ஓவியங்கள் அவருடைய பார்வைக்கு வைக்கப்பட்டது. சிறந்த ஓவியர்களுக்கு அவர் பரிசுகளும், விருதுகளும் வழங்குவார்.

       இவ்வாறு அபதுஸ்ஸமத், 'ஷிரீன் கலாம்' அல்லது 'இனிய தூரிகை' என்ற பட்டம் பெற்றார். பதேபூர் சிக்ரி கட்டப்பட்டபோது பல ஓவியர்கள் அங்குள்ள அழகிய கட்டடங்களில் அழகுக்கு அழகு செய்தாற்போல் ஓவியங்களைத் தீட்டினார். அக்பரின் ஓவியத் துறையில் இந்துக்களே அதிகம் இருந்தனர். தஸ்வந்த், பஸவன், சன்வால் தாஸ், தாராஸந்த், ஜகன்நாத், கேசுமுகுந்த், ஹரிபான்ஸ் ஆகியோர் சிறப்பான ஓவியர்கள்.

      இவர்களில் பஸவன் பின்னணிக் காட்சி, உருவங்கள் வரைவதில் வல்லவர். ராமாயனம் போன்ற காவியங்களில் விளக்கப்படங்களை வரைந்து புகழ் பெற்றார். தஸ்வந்த் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். இவரது கலைத் திறனைக் கண்டு அக்பர் வியப்படைந்தார். இவர் புகழின் உச்ச நிலையை அடையும் போது பைத்தியம் பிடித்து தற்கொலை செய்து கொண்டார்.

       ஓவியத்துறைத் தலைவர் குவாஜா அப்துஸ்ஸமத் 400 பேர்களுக்கு கற்பித்தார். அக்பர் பின்வருமாறு ஓவியத்தின் சிறப்பை கூறுகிறார்,'ஓவியத்தை விரும்பாதவர்களை நான் விரும்புவது கிடையாது. ஓவியனால் இறைவனை எழிதில் புரிந்து கொள்ள முடியும். அங்கம் அங்கமாக வரையும் ஓவியன் அவ்வோவியத்தை உயிர் ஓவியமாக ஆக்கமுடியாமல் உயிர்கொடுக்கும் இறைவனை நினைக்கிறான். தன் அறிவை வளர்க்கிறாhன்'.

      ஓவியக் கலையில் பேரார்வம் கொண்ட அக்பர் வெளிநாடுகளிலிருந்து காகிதங்களையும், தூரிகைகளையும், வண்ணப்பூச்சிகளையும் தருவித்துத் தன்னிடமுள்ள ஓவியர்களை சிரிய அளவிலமைந்த அழகிய ஓவியங்களை வரையச் செய்தார்.

       அக்பரைப் போன்றே அவரது மகன் ஜஹான்கீரும் ஓவியக் கலையில் ஈடுபாடு கொண்டிருந்தார். தன்னை ஒரு சிறந்த ஓவியர் என்றும், ஓவியத் திறனாய்வு செய்வதில் வல்லவர் என்றும், ஓர் ஓவியத்தை தன்னிடம் கொடுத்தால் அது யாரால் எப்பொழுது வரையப்பட்டதென்று தன்னால் கூற முடியுமென்றும் ஜஹான்கீர் தனது வாழ்க்கைக் குறிப்புகளில் கூறுகிறார். இவரின் சபைக்கு வந்த சேர். தாமஸ் ரோம் பேரரசின் கூற்றை வலியுறுத்துகிறார். தன் பாட்டன் பாபரைப் போன்று ஜஹான்கீரும் இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசிப்பதில் பெரு விருப்பம் கொண்டவராக இருந்தார்.

      காஷ்மீரின் கண்கொள்ளா இயற்கைக் காட்சிகளைக் காண தனது ஆட்சிக் காலத்தின் 13 முறை அங்கு சென்றார். அங்குள்ள மலர்களையும், செடிகொடிகளையும் தானும் ஓவியமாக
தீட்டினார். தன்னிடமிருந்த ஓவியர்களையும் அவைகளை ஓவியமாகத் தீட்டுமாறு பஒpத்தார். அவரது அவையில், பருக்பெக், முஹம்மத் நதீர், முஹம்மத் முராத் போன்ற முஸ்லிம் ஓவியர்கள் இருந்தனர்.

     ஷாஜஹானின் காலத்தில் சிற்பக்கலையே சிறப்புற்று விளங்கியது. ஓவியக்கலைக்கு பாரிய ஊக்கம் வழங்கப்படவில்லை. மிகச்சிறந்த ஓவியர்களைத் தவிர ஏனையோர் அரசவையிலிந்தும் நீக்கபட்டனர். ஷாஜஹானின் பிள்ளைகளுள் தாராஷிக்கோஓவியக் கலைஞராக விளங்கினார். அவர் மிக அழகிய ஓவியங்களை சேர்த்தும் வைத்திருந்தார்.

     தீவிரமாக மார்க்கத்தினைக் கைக்கொண்ட ஒளரங்கசீபின் காலத்தில் கூட ஓவியக்கலை தேய்ந்து போய்விடவில்லை எனப்தை அவரது உருவத்தைப் பிரதிபலிக்கும் பல ஓவியங்கள் தற்போதுவரை கிடைக்கப்பெறுவதைக் கொண்டு எமக்கு உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். அவரது இனக்கமின்றி அவ்வோவியங்களைத் தீட்டியிருக்க முடியாது என்பது உறுதி. அவர் வேட்டையாடுவதைப் போன்றும், பயணம் செய்வதைப்போன்றும், ஓதிக்கொண்டிருப்பதைப் போன்றும், படைநடத்துவது போன்றும் பல ஓவியங்கள் இன்றுவரை காணப்படுகின்றன.

        ஒளரங்கசீப்பின் மறைவைத் தொடர்ந்து மொகலாயப் பேரரசு படிப்படியாக வீழ்ச்சியடையத் துவங்கியதையடுத்து ஓவியர்கள் லக்ணோ, பாட்னா, முர்ஷிதாபாத் மைசூர், ஹைதராபாத் போன்ற இடங்களுக்கு குடிபெயர்ந்தனர்;.

      பழங்கால இந்தியாவில் சிறப்புற்று விளங்கிய ஓவியக்கலை குப்தர்களின் வீழ்ச்சிக்குப்பின்னால் நலிந்து போனது. இந்திய ஓவியக் கலை என்பது பழம்பெருமையும், சிறப்புமுடைய தனிப்பெரும் கலையாக வளாந்து ஓங்கி செழித்தது. ஆனால் குப்தர்களின் வீழ்ச்சிக்குப் பின்னால் வீழ்ச்சியுற்று கவனிப்பாரற்றுக் கி;டந்தது. இச்சந்தர்ப்பத்தில் இதற்கு உயிரூட்டியோர் முகலாயர்களாவர்.

         இந்தவகையில் இந்தியா முஸ்லிம் மன்னர்களின் ஆட்சியில் சகல கலைகளும் சிறப்புற வளர்ந்து செழித்துள்ளது என்பது தெளிவான உண்மையாகும்
முடிவுரை

        இந்தியாவின் கலை, கலாசார, பண்பாட்டு நாகரிக வளர்ச்சியில் முஸ்லிம் மன்னர்களது பங்கு அளப்பரியது. ஆனால், இந்திய முஸ்லிம் மன்னர்களது வரலாறுகள் பக்கச்சார்பான  வரலாற்றாசிரியர்கள் சிலரால் சிதைக்கப்பட்டுள்ளது. அவர்கள் எத்தகைய சாதனைகளையும் செய்யவில்லை என்றும், இந்தியாவின் இழிவுக்கெல்லாம் முஸ்லிம் மன்னர்களே காரணம் எனவும் இந்தியர்களே கூறி வருகின்றனர்.

      எமது இலங்கையின் வரலாற்றினை நோக்கும் போது, போர்த்துக்கீஸர், பின்பு ஒல்லாந்தர், அதனைத் தொடர்ந்து ஆங்கிலேயர் என ஆக்கிரமிப்பாளர்கள் வந்து போயினர். அவர்கள் எமது நாட்டு மக்களை அடிமைப்படுத்தி, மூலைச்சலவை செய்து, எமது நாட்டு வளங்களைச் சுரண்டிச் செல்வதற்கான ஏற்பாடுகளையே செய்துவிட்டுச் சென்றனர். 

     எனவேதான், அவர்கள் எமது நாட்டில் விட்டுச்சென்ற எச்சங்களாக அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் கிருஸ்தவ மதமும், எமது நாட்டு வளங்ளை சுரண்டுவதற்காக போடப்பட்ட ரயில் தண்டவாளங்களும் மட்டுமே.

    ஆனால், இந்தியாவைப் பொருத்தவரை முஸ்லிம் மன்னர்களது ஆட்சி இதற்கு நேர் முரணானது. அவர்கள் நாட்டு வளங்களைச் சுரண்டி தமது நாடுகளுக்கு கடத்திச் செல்லவுமில்லை. இஸ்லாமிய கலீபாக்களாக இருந்தவர்களிடம்  ஒப்படைக்கவுமில்லை. மாறாக, உள்நாட்டின் கல்வி, கலை, கலாசார வளர்ச்சிக்காகவே அவற்றை பயன்பத்தியுள்ளனர் என்பது அவர்கள் விட்டுச் சென்றுள்ள எச்சங்களை, கலாசார சின்னங்களை கூர்ந்து, நடு நிலையுடன் நோக்கும் எவரும் ஏற்றுக் கொள்வர். எனவே, இந்தியர்கள் முஸ்லிம்களுக்கு இப்பணிகளுக்காக என்றும் நன்றியுணர்வுடன் நோக்கவேண்டியது அவசியமாகிறது.

      துரதிஷ்டவசமாக இந்நிலை குறித்து இந்திய மக்களே எதிர்மறையான கருத்துக்களைக் கொண்டுள்ளது கவளைக்குரியதாகும். எனவே, இந்த உண்மை இந்திய மக்களிடம் சென்றடைய வழி செய்வது ஒரு முஸ்லிம் எழுத்தாளர் மீதுள்ள பொறுப்பாகும்.

இஸ்லாம் முன்வைத்துள்ள மனித உரிமைகள் - 03





இஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமைகள்.



                 
           Ash Sheikh. M.S.Riyaz Mohamed (Naleemi) M.A.,Dip.in Edu,

    இந்தத்தலைப்பு மிக விரிவாக நோக்கப்பட வேண்டிய தலைப்பாகும். ஆயின்,  அதனை இங்கு மிகச்சுருக்கமாக முன்வைக்கிறேன் இன்ஷா அல்லாஹ்,.  இன்று இஸ்லாமிய சமுகத்தில் பெண்கள் காணப்படும் நிலையை வைத்து, 'எல்லா மனிதர்களும் ஒன்று என்று கூறுகின்றது மனித உரிமைச் சட்டம். இஸ்லாத்தின் கோட்பாட்டின் படி, பெண் என்பவள் ஆண்களுக்குக் கீழாகவே கருதப்படுகிறாள். நீதிமன்றத்தில் ஒரு பெண் ஓர் ஆனின் பாதியாகவே கருதப்படுகிறாள். அவளுக்கு சுதந்திர நடமாட்டம் அனுமதிக்கப்படுவதில்லை. அவளுக்கு பாகப்பிரிவினையில் பாரபட்சம் காட்டப்படுகின்றது' போன்ற இஸ்லாத்தின் தாத்பரியங்களை விளங்காத சிலரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளாகும். இஸ்லாத்தின் உண்மை நிலையை விளங்கும் எவரும் இத்தகைய விமர்சனங்களை முன்வைக்க முடியாது.

    இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளையும், சலுகைகளையும் சரியாக விளங்குவதற்கு, இஸ்லாம் உலகிற்கு வருவதற்கு முன்பு பெண்ககளது நிலை எவ்வாறு இருந்தது என்பதனை விளங்குவது அவசியமாகும். அந்தவகையில், அதனை சுருக்கமாக நோக்கினால், இஸ்லாத்திற்கு முற்பட்ட காலமான கி.பி.586 இல்
கூடிய ஒரு மாநாடு, 'பெண்கள் மனிதப்பிறவியா அல்லது பிராணியாக ஏற்பதா' என விவாதித்து, 'அவள் ஆண்களுக்கு பணிவிடை செய்வதற்காக படைக்கப்பட்ட ஒரு மனிதப்பிறவி என்ற முடிவுக்கு வந்தது. 1995 ஆம் வருடம் பீஜிங் நகரில் நடைபெற்ற மாநாடும் கூட பெண்கள் பற்றிய சர்ச்சையையே
கிளப்பியது.

      இஸ்லாத்தின் வருகைக்கு முன்னர், சுமேரியர் ஒர் ஆண் குற்றம் செய்தால் மெலினமான தண்டனை வழங்கினர். அதே தவறை ஒரு பெண் செய்தாலோ கடுமையான தண்டனைகளை வழங்கினர். சிலபோது அவளது மூக்கை வெட்டி எறிந்தனர்.
 
       மெசபதேமியர், ஒரு பெண் கருச்சிதைவுக்குப்பின்னர் அவள் உயிரோடிருந்தாலும் சரி, மரணித்தாலும் சரி, அவளை கழுமரத்தில் ஏற்றினார்களே தவிர பூமியில் புதைக்கவில்லை.

       கிரேக்கர் தட்டுமுட்டு சாமான்களை வாங்குவதும் விற்பதும்போல பெண்களை வாங்கவும் விற்கவும் செய்தனர். அவர்களை மிருகங்களுக்குப் பகரமாக மாற்றும் பண்டமாற்றுப் பொருளாகவே கருதினர்.

      உரோமரிடத்தில் பெண்ணுக்கு எத்தகைய மதிப்பும் இருக்கவில்லை. அவள் நீதி கோறி நீதிமன்றத்துக்கு செல்ல முடியாத நிலையில் இருந்தாள். திருமணத்திற்குப்பின்பு அவளது சொத்துக்கள் யாவும் கணவனது உடமைகளாக மாறின. அவள் சுயமாக உழைக்கவோ, சொத்துக்கள் வைத்திருக்கவோ, விற்கவோ, வாங்கவோ அனுமதிக்கப்படவில்லை.

     இந்தியர் பெண்களை நஞ்சு, நரகம், நெருப்பு, மரணம், தொற்று நோய், நாகம் என்பவற்றைவிட கொடிய ஒன்றாகக்கருதினர். இறந்த கணவன் எறிக்கப்படும் போது உடன்கட்டையேற்றும் வழக்கு அங்கு காணப்பட்டது.

      முன்னைய கிருஸ்தவர்கள் பெண்களை நரகத்தின் வாயில் என்றும், தீமைகளின் அன்னை என்றும், ஷைத்தானின் முதல் உருவம் என்றும், கொட்டத்தயாராக நிற்கும் தேள் என்றும் கருதி வந்தனர்.

     அரேபியரைப் பொருத்தவரையில், அவர்கள் பெண்களுக்கு எவ்வித மதிப்பும் வழங்கவில்லை. போகப் பொருளாகவும், வியாபாரப் பண்டமாகவும் கருதினர். பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தனர். வாரிசு சொத்துக்களாக பகிர்ந்துகொண்டனர்.


      இத்தகைய ஒரு சூழ்நிலையிலேயே உலகிற்கு இஸ்லாம் வந்தது. பெண்களை இஸ்லாம் உயர்ந்த அந்தஸ்தை வழங்கி கௌரவப்படுத்தியது. பெண்களை வாரிசுச் சொத்துக்களாக பகிர்ந்து கொண்ட அராபியருக்கு மத்தியில், அவர்களுடைய சொத்துக்களிலிருந்து பெண்களுக்கு பாகம் குறித்தது. குழந்தைகளை கொலை செய்வதை கடுமையாக எச்சரிக்கிறது. அதனை மறுமை வாழ்வுடன் தொடர்பு படுத்தி அச்சமூட்டுகிறது. 'உயிருடன் புதைக்கப்பட்ட (பெண்குழந்தையான)வளும் வினவப்படும் போது. எக்குற்றத்திற்காக கொல்லப்பட்டாள் (என்று வினவப்படும் போது) (82:8-9)

    பெண்கள் மனித இனமா என்று விவாதம் நடத்திய சமகத்தில், ஆண்களும் பெண்களும் சமனே, அவர்கள் ஒரே ஆண் பெண்ணிலிருந்து தோன்றியோர் என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது. 'மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனைப்பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆனடமாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரைப் படைத்து) அவரிலிருந்து அவரது மனைவியைப் படைத்தான். பின்னர், அவர்கள் இருவரிலிருந்தும் பல ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான்'. (4:1)

இவ்வாறே, ஆண்களுக்குப்போலவே பெண்களுக்கும் சம உரிமைகளை இஸ்லாம் வழங்கியுள்ளது. நன்மையான செயல்களுக்கான கூலி இரு சாராருக்கும் சமனாக வழங்கப்படுகிறது. பெண்களின் உயிர், கண்ணியம் சொத்து ஆகியவற்றிற்கான உரிமைகள் ஆண்களைப் போன்றே வழங்கப்படுகின்றன. சொத்துக்களை வைத்திருப்பதற்கு மாத்திரமன்றி, அவற்றை விற்கவோ, வாங்கவோ பூரண சுதந்திரம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 'இறந்து போன  பெற்றேரோ, நெருங்கிய உறவினரோ விட்டுப்போன பொருள்களில் ஆண்களுக்குப் பாகமுண்டு. அவ்வாறே பெண்களுக்கும் பாகமுண்டு' (4:7)

    ஒருவர் இறந்து போனதும் அவரது சொத்துக்களை வாரிசு சொத்துக்களாக பங்கிடுவது போல இறந்து போன மனிதரின் மனைவியரை பங்கிட்டுக்கொள்ளும் துர் பழக்கம் ஜாஹிலிய்யா சமுகத்தில் காணப்பட்டது. மனிதாபிமானமற்ற இந்த பாரம்பரியத்தை இந்லாம் அழித்தொழித்து, பெண்ணின் ஆளுமைக்கு மதிப்பும், கண்ணியமும் வழங்கியது. 'விசுவாசம் கொண்டோரே! பெண்களை (இறந்தவரது சொத்தாக மதித்து அவர்களை) பலவந்தமாக நீங்கள் அனந்தரம் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல' (4:19)

     ஜாஹிலிய்யாக்கால இக்கொடிய பழக்கத்திலிருந்து பெண்களை விடுவித்த இஸ்லாம், தனது கணவனை எத்தகை நிர்ப்பந்தமுமின்றி விரும்பியவாறு தெரிவுசெய்யும் உரிமையையும் அவளுக்கு வழங்கி கௌரவித்தது. எந்தவொரு விதவைக்கும் அவளுடன் கலந்தாலோசிக்காது மணமுடித்து வைப்பது கூடாது. அவளது விருப்பம் பெறப்படல வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்தியது.

      இஸ்லாம் ஆண்களுக்கு மாத்திரமன்றி பெண்களுக்கும் தான் விரும்பாத போது கணவனிடமிருந்து விவாகரத்து பெறும் உரிமையை வழங்குகிறது. இதனையே இஸ்லாமிய சட்டவியலில் 'அல்குல்உ' என்ற அம்சம் குறிக்கிறது. அத்தோடு, ஆண்களைப்போன்றே பெண்களுக்கும் பொருளாதார சமத்துவத்தை இஸ்லாம் தான் முதலில் முன்வைத்தது எனலாம். 'ஆண்களுக்கு அவர்கள் சம்பாதித்வை உரியன. பெண்களுக்கு அவர்கள் சம்பாதித்தவை உரியன.(4:32) 'ஆண்களுக்கு முறைப்படி பெண்களுக்கு உள்ள உரிமைகள் போன்றே(ஆண்கள் மீது) பெண்களுக்கும் உண்டு' (2:228)

   பெண்களுடன் அன்பாகவும், கணிவுடனும் நடக்குமாறு இஸ்லாம் ஏவுகின்றது. 'உங்கள் பெண்களுக்கு நீங்கள் கொடுத்ததில் எதையும் எடுத்துக்கொள்ளும் பொருட்டு அவர்களை (உங்களது வீட்டில்) நீஙகள் தடுத்து வைக்காதீகள். மேலும் அவர்களுடன் நீங்கள் கண்ணியமான முமறையிலும், சகிப்புத் தன்மையுடனும் நடந்து கொள்ளுங்கள்.

     பெண்களது மானத்திற்கான உரிமையையும் உத்தரவாதத்தினையும் இஸ்லாம் வழங்குகிறது. எனவேதான், ஏராளமான மேற்கத்தைய பெண்கள் இன்று இஸ்லாத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறார்கள். அல்குர்ஆன் கூறுகிறது, 'எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி, (அதற்கு வேண்டிய) நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டுவராவிட்டால், அவர்களை நீங்கள் 80 கசையடி அடியுங்கள். பின்னர் அவர்கள் கூறும் சாட்சியத்தை எக்காலத்திலும் ஒப்புக்கொள்ளாதீர்கள். ஏனெனில், நிச்சயமாக அவர்கள் வரம்பு மீறியவர்கள்'. (24:4)

     இவ்வாறு இஸ்லாம் பெண்களுக்குத் தேவையான சகல உரிமைகளும் அவர்கள் கேட்காமலே, அவர்கள் போராடாமலேயே அவர்களுக்கு வழங்கியது. ஆனால், இன்று மனித உரிமை என்ற பெயரில் பெண்கள் மீண்டும் அந்த ஜாஹிலிய்யாவை நோக்கி செல்கின்றனர். தாம் ஒரு போகப்பொருளாக இருப்பதற்கும், விலை மாதர்களாக இருப்பதற்குமென தமது கண்ணியத்தை தாமே அவர்கள் குழைத்துக்கொள்கின்றனர்.

    ஆண்களைப்போன்று பெண்களும் சகல அம்சங்களிலும் சமத்துவம் கோறுவது என்ற விடயத்தைப் பொருத்தவரையில், அது சாத்தியமற்ற விடயமாகும். காரணம், ஆணும், பெண்ணும் இயல்பிலேயே பல வேறபாடுகளுடன் படைக்கப்பட்டுள்ளனர். பெணடகளே குழந்தை பெறுகின்றனர். ஆணைப் பொருத்தவரையில் அவனுக்கு இந்த வாய்பு இல்லை. ஆணின் முகத்தில் தாடி, மீசை முழைக்கிறது. ஆனால், பெண்களுக்கு அவ்வாறு இல்லை. உடலுறுப்புகள் இருபாலாருக்கும் ஒரே அமைப்பில் இல்லை. பெண்களுக்கு மாதாந்த ருது ஏற்படுகிறது ஆண்களுக்கு இல்லை. இவ்வாறு இருபாலாருக்குமென பல வித்தியாசங்களை வெளிப்படையாகவே அவதானிக்கலாம். இவற்றையெல்லாம் மாற்றி, சமப்படுத்துவதன் மூலம் சமத்துவ உரிமையை வழங்க முடியும் என்று வாதாடுவதானால் அது அறிவீனமாகும். தனது முகத்தை நன்கு சவரம் செய்து கொள்வதன் மூலமோ பெண்களைப்போன்று ஆடை அநிந்துகொள்வதன் மூலமோ ஆண் செயற்கை கருப்பை மூலம் குழந்தையை உருவாக்குவதன் மூலமோ ஆணும் பெண்ணும் சமமாகி விட முடியாது. ' அது அல்லாஹ் விதித்த நியதியாகும், 'அல்லாஹ் மனிதர்களைப் படைத்;த வழியே அவனுடைய இயற்கை வழி. அவனது படைப்பில் எவ்வித மாற்றமும் இல்லை' (30:30) என அல்குர்ஆன் இதனைத் தெளிவுபடுத்துகிறது.

    எனவே, இஸ்லாம் உரிமைகளை வழங்கும்போது ஆண் பெண் இருபாலாரதும் இயற்கை அமைப்புக்களையும், இயல்பூக்கங்களையும் நன்கு அறிந்து அவற்றின் அடிப்படையிலேயே தீர்மானம் மேற்கொண்டிருக்கிறது. அந்தவகையில் சில விடயங்களில் ஆண்களுக்கு சில உரிமைகளை அதிகமாகவும், வேறு சில விடயங்களில் பெண்களுக்கு உரிமைகளை ஆண்களை விட சற்று அதிமாகவும் அது வழங்கியுள்ளது என்ப குறிப்பிடத்தக்கதாகும்.

இஸ்லாம் வழங்கியுள்ள பொருளாதார உரிமைகள்.

    இஸ்லாம் சுதந்திரமான செயற்பாடு, பரஸ்பர கூட்டுறவு, ஒத்துழைப்பு தனிப்பட்டவர்களது சேவைகள், பணிகளின் பரஸ்பரப் பரிமாற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் தனது பொருளாதாரக் கோட்பாட்iடி வகுத்துள்;ளது. இந்த பொருளாதார அமைப்பில்  ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வாழ்வின் அடிப்படைத் தேவைகளை நிiவேற்றும் உரிமைகளை வழங்கியுள்ளது.

   சொத்துக்களைப் பொருத்தவரையலி இஸ்லாம் ஒ புரட்சிகரமான கொள்கையை அறிமுகப்படுத்தியது. இஸ்லாத்தின் சொத்துரிமைக் கோட்பாட்டிலிருந்தே மனிதனின் பொருதாராத உரிமைகள் எனும் அணுகுதல் தோற்றம் பெற்றது.

    இஸ்லாமிய நோக்கில் செல்வம் யாவும் அல்லாவுக்குரியது. 'வானங்கள் பூமியிலுள்ள யாவும் அல்லாஹ்வுக்கேயுரியன' (53:31) என அல்குர்ஆன் கூறுகின்றது.

    எனவே, மனிதர்கள் அனைவரும் பணன்பெறவே இந்தப் பூமியையும் அதிலுள்ள அனைத்தினையும் அவன் படைத்தான்.'மேலுமு, பூமியைப் படைத்து அதனைப் படைப்பினங்களுக்காக அவன் அமைத்தான்...' (55:10)

    இப்பிரபஞ்சப் பொருட்கள் யாவும் அல்லாஹ்வுக்குரியனவாகவிருப்பதால், மனிதன் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பாளியாகவே உள்ளான். எனவே, மனிதன் இறைக்கட்டளைக்கேட்பவும், மனித சமுகத்தின் பொது நலன்களுக்காகவும் அதனைப் பயன்படுத்த கடமைப்பட்டுள்ளான்.

      ஆயினும், இஸ்லாம் தனிமனித சொத்துரிமையையும் ஏற்றுக்கொள்கிறது. 'ஆண்களுக்கு அவர்கள் சம்பாதித்தவற்றில் பங்குண்டு, பெண்களுக்கு அவர்கள் சம்பாதித்தவற்றில் பங்குண்டு' (4:32)

      இஸ்லாம் செல்வந்தர்களின் சொத்திலிருந்து ஏழைகளுக்குரிய பங்குகளை அங்கிகரிக்கிறது. சொத்துக்களை பயன்படுத்த இஸ்லாம் விதித்துள்ள சட்டங்கள் ஏழைகளினது உரிமைகளைப் பரிக்காமல் பாதுகாக்கிறது. சொத்துக்கள் சிலரினது கைகளில் மட்டும் சுழல்வதற்கு இஸ்லாம் அனுமதிக்கவில்லை. அவ்வாறு சுழல்வதை இஸ்லம் பெரும் அநீதியாகக் கருதுகின்றது.

    இன்று அமேரிக்காவின் நிலையை எடுத்துக் கொண்டால், மிக்க செல்வச் செழிப்புடன் காணப்படும் அமேரிக்காவில் வறுமைக்கோட்டிற்கும்  கீழே வாழுகின்ற மக்கள் தொகையினரே அதிகம். அங்கு நடைபெறும் பொருளாதார சீர்கேட்டின் விளைவாக 20 விகிதமான மக்கள் தொகையினர் 90 சதவிகித சொத்துக்களை அனுபவிக்கின்றனர். இது பெரும் அநீதமாகும். (வெற்றிகொள்ளப்படும்  அனைத்து) ஊர்களிலிருந்தும்  அல்லாஹ் தனது தூதர்களுக்குக் கொடுத்தவைகள், அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும், பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரித்தானவையாகும். செல்வம் உங்களில் பணக்காரர்களிடையில் மட்டுமே சுற்றிக்கொண்டிருக்காமலிருக்க (மற்றவர்களுக்குக் கிடைக்கும் பொருட்டு இவ்வாறு அவன் கட்டளையிடுகின்றான்)' (59:7) இது தான் இஸ்லாத்தின் நீதிக்கு உதாரணமாகும்.

       அல்குர்ஆனின் கருத்துப்படி உலகில் மனிதன் உயிர்வாழத் தேவைப்படும் அனைத்தும் அனைவரதும் உரிமையாகும். உலகில் சிலருக்கு சிலரை விட மேலதிகமாக சொத்து சம்பாதிக்க முடிகிறது என்றால் அவர்கள் மேலதிகமாக சம்பாதிக்க முடியாதவர்களுக்காக தமது மேலதிக பங்கிலிணரந்து கொடுத்துதவ வேண்டுமென இஸ்லாம் எதிர்பார்க்கிறது.

   'இன்னும் அவர்களுடைய பொருட்களில் யாசிப்போருக்கும் யாசிக்காதோருக்கும் உரிமையுண்டு' (51:19)

   'இன்னும் அர்கள் எத்தகையேரெனில், அவர்களின் பொருட்களில் குறிப்பிட்ட உரிமை இருக்கிறது. யாசிப்போருக்கும், (யாசிக்க வெட்கப்பட்டு) ஒதுங்கிக்; கொள்வோருக்கும் உரிமை இருக்கிறது' (59:23-24)

     சமுகத்திலுள்ள சகல தரப்பினரதும் பொருளாதார உரிமைகளை உறுதி செய்வதற்காக இஸ்லாம் வியாபாரம் தொடர்பான ஒரு ஒழுக்கக் கோவையையே உருவாக்கியுள்ளது. இரவல் தொடர்பாக, அவை ஒப்படைப்பதன் அவசியம், கடன் தொடர்பாக, அவற்றை உரய நேரத்தில் மீளச் செலுத்துவதன் முக்கியத்துவம். சொத்துக்களை அநியாயமாகவும், தவறான முறையிலும் விழுங்குவதன் பாரதூரம், அளவை நிறுவையில் மோசடி செய்வதன் பாரதூரம், வட்டியின் விபரீதங்கள், கலப்படம், பொய்சத்தியம் செய்வதன் விபரீதங்கள், மக்களுக்கு பாதகம் ஏற்படும் விதத்தில் பொருட்களை பதுக்குபவனது நிலை போன்ற இன்னோரன்ன செயற்பாடுகளைத் தடுத்து பொருளாதார உரிமைகளை மேம்படுத்துவதனைக் காணலாம்.

    ஒரு தனிமனிதனின் சொத்துக்கும் இஸ்லாம் உத்தரவாதமளித் திருப்பதைக்க காணலாம். ஒருவரது பொருளாதார உடைமையை எத்தகைய நட்டஈடும் வழங்களமல் சுவீகர்ப்பதற்கு அரசுக்குக்கூட உரிமை கிடையாது. ஹூனைன், தபூக் யுத்தங்களின் போது கடுமையான பொருளாதார நெருக்கடியின் போது கூட மக்களது உடமைகளை கட்டாயத்தின்பேரில் சுவீகரிக்க நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை. மாறாக, மக்களுக்கு விரும்பியவாறு அன்பளிப்பு செய்யும்படி ஆலோசனை கூறியதுடன். மேலதிகமாக கடன்களையும் பெற்றார்கள்.

     இஸ்லாம் பொருளாதாரத் துறையில் தனியாருடை சொத்துரிமையை பாதுகாக்கிறது என்பதன் மூலம் அது சமுகத்தின் பொருளாதார நலவுரிமையை பாதிக்கும் வகையில் தனிமனிதர்கள் எவ்வித வரம்பும், கட்டுப்பாடுமற்ற பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டு பொருளாதாரச் சுரண்டலில் ஈடுபடலாம் என்பது பொருளல்ல. மாறாக பொருளாதாரத் துறையுடன் தொடர்பான இஸ்லாமியக் கோட்பாடானது இந்நடவடிக்கையில் ஈடுபடும் சகல தரப்பினரதும் உரிமைகளை உறுதி செய்யும் வகையிலேயே அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

இஸ்லாம் முன்வைத்துள்ள அரசியல் உரிமைகள்
    இஸ்லாத்தின் அரசியல் உரிமைகள் தொடர்பான கோட்பாடானது, ஆட்சி பற்றிய இஸ்லாத்தின் கோட்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது. மௌலானா மௌதூதி அவர்கள் ஆட்சி பற்றிய இஸ்லாமியகோட்பாட்டினை பின்வருமாறு விளக்குகிறார்கள், 'இஸ்லாமிய ஆட்சியின் நோக்கம் வெறுமனே மக்கள் ஒருவரை ஒருவர் சுரண்டுவதிலிருந்து தடுப்பதும், மக்களின் சுதந்திரத்தைப் பேணுவதும், ஆட்சியின் பிரஜைகளை வெளிநாட்டுப் படையெடுப்புகளிலிருந்து பாதுகாப்பது மட்டுமல்ல. அல்லாஹ் அல்குர்ஆனில் வரையறுத்திருக்கும் வகையிலான ஒழுங்கும் சமபலமுமுடைய ஒரு சமுக நீதி முறையை உருவாக்குவதையும் அது நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன் நோக்கம் எல்லாவகையான தீமைகளையும் ஒழித்து, அல்குர்ஆன் கூறும் எல்லாவகையான நன்மைகளையும் குண ஒழுக்கங்களையும் வளப்பதுமாகும்'

   இஸ்லாமிய ஆட்சிமுறையானது சர்வாதிகார ஆட்சி முறையன்று. அது ஜனநாயக கோட்பாடுகளில் நம்பிக்கையுள்ள ஓர் அரசியலமைப்பாகும்.  அது தனது ஆட்சிமுறைமையை மக்களோடு கலந்தாலோசித்து தீர்மானம் மேற்கொள்ள வேண்டிய அரசியலமைப்பாகும். எனவேதான், இன்று இஸ்லாமிய உலகில உள்ள மேற்கின் கைப்பாவைகளாக, தலையாட்டு பொம்மைகளாக விளங்கும் சர்வாதிகார  ஆட்சியாளர்கள் இவ்வாட்சி முறையினை விமர்சிப்பதைக் காணலாம். 'உலகம் முழுவதும் வழக்கத்திலிருக்கும் சுயாட்சி நம் நாட்டு மக்களுக்கு உகந்தால்ல. முழுச்சுதந்திரமான குடியரசு நமது நாட்டுக்கு ஒத்துவராது' என சவுதி அரேபியாவன் மன்னர் பஹ்த் கூறியிருப்பது இதற்கு சிறந்த உதாரணமாகும்.

   இஸ்லாமிய ஆட்சியின்போது அது குடிமக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் மாத்திரம் தனித்தலைப்பாக ஆராயப்பட வேண்டிய மிகப்பெரும் தலைப்பாகும். எனவே, அது முன்வைத்துள்ள குடிமக்களுக்கான உரிமைகளை சுருக்கமாக நோக்கினால் பின்வருமாறு கூறலாம்.

    உயிர் உடைமைப் பாகாப்பு

      இ;த்தலைப்பை விளக்க 'எவனொருவன் மற்றொரு ஆத்மாவைக் கொலை செய்ததற்குப் பிரதியாகவோ அல்லது பூமியில் குழப்பத்தைத் தடை செய்வதற்காகவோ அன்றி (அநியாயமாகக்) கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையும் கொலை செய்தவன் போலாகின்றான். அன்றி எவன் ஒரு ஆத்மாவை வாழ வைக்கிறானோ, அவன் மனிதர்கள் யாவரையும் வாழ வைத்தவன் போவான்'. (5:32) என்ற அல்குர்ஆன் வநனமே போதுமானதாகும்.

    நபியவர்களின் இறுதி ஹஜ் பேருரை இதற்கு தக்க உதாரணமாகும். 'இறந்வர்களை மீண்டும் எழுப்பப்படும் நாளில் நீங்கள் இறைவனைச் சந்திக்கும் வரையில் உங்களது உயிர்களும், உடைமைகளும் ஒருவருக்கொருவர் பறித்துக்கொள்ள தடைசெய்யப்பட்டுள்ளது'


      இவ்வசனங்கள் முஸ்லிமை மட்டும் குறிப்பதன்று, மாறாக, இஸ்லாமி ஆட்சியின் கீழ் வாழும் சகலரையும் குறிக்கும் பொது வசனங்களாகும்.

    சாதாரணமாக, இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழும் குடி மகன் என்ற வகையில், முஸ்லிமல்லாதாரின் உயிர் உடமைப் பாதுகாப்பு தொடர்பாகவும் (ஸல்) அவர்கள் வலியுறுத்தினார்கள், 'ஒப்பந்தத்தில் உள்ள ஒரு திம்மியை(முஸ்லிமல்லாதாரை) எவரேனும் கொலை செய்தால் அவர் சுவர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்' (புஹாரி, அபூதாவுத்)

    மற்றுமொருமறை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், 'யார் முஸ்லிமல்லாத ஒரு உடன்படிக்கை செய்திருக்கும்  திம்மிக்கு அநீதியிழைக்கிறாரோ அல்லது அவரது உரிமையைக் குறைக்கின்றாரோ, அல்லது அவரது சக்திக்கு மேல் பொறுப்புக்களை சுமத்துகின்றார்களோ அல்லது அவரது மன விருப்பின்றி ஏதேனுமொன்றை அவரிடமிருந்து பெறுகின்றாரோ அவருக்கெதிராக மறுமையில் நான் வாதிடுபவனாக இருப்பேன்' (அபூதாவுத்)
   
     ஒரு தடவை எகிப்தில் கவர்னராக இருந்த அம்ரிப்னுல் ஆஸ் (ரழி) அவர்கள் பள்ளிவாசலை விஸ்தரித்து கட்டுவதற்காக ஒரு யூதப் பெண்ணின் வீட்டை அவளது விருப்பமின்றி வேறு இடம் தருவதாகக் கூறி உடைத்து விட்டு பள்ளிவாசலை விசாலமாக்கிக் கட்டினார்கள். அப்பெண் தலைநகருக்குச் சென்று கலீபாவாக அன்று காணப்பட்ட உமர் (ரழி) அவர்களிடம் முறையிட்டாள். உடனே அம்ரிப்னுல் ஆஸ் (ரழி) அவர்களை வரவழைத்து விசாரித்தபோது, அவள் அளவுகதிகமாக ஈட்டுத்தொகையை எதிர்பார்ப்பதாகவும், அவளது ஈட்டுத்தொகை பைத்துல் மாலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தபோது உமர் (ரழி) அவர்கள் அப்பள்ளிவாசலை இடித்துவிட்டு அப்பெண்ணின் வீட்டைக் கட்டிக்கொடுக்குமாறு உத்தரவிட்டார்கள். இச்சம்பவமானது இஸ்லாமிய ஆட்சியின் கீழ் முஸ்லிமல்லாதார் கூட தங்களது உடமைப் பாதுகாப்புக்கு எந்தளவு உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது கண்கூடு. இவ்வாறான ஏராளமான சம்பவங்களை இஸ்லாம் அரசோச்சிய கால வரலாற்றில் கண்டுகொள்ள முடியும்.

    எனவே, இஸ்லாமிய அரசாட்சியின்போது குடிமக்கள் முஸ்லிம், முஸலிமல்லாதார் என பாகுபாடின்றி சகலரினதும் உயிர், உடமைப்பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிறது.


கௌரவத்திற்கு பாதுகாப்பு

    இஸ்லாமிய அரசு வழங்கும் உரிமைகளில் தனிமனிதரது கௌரவத்திற்கு வழங்கும் பாதுகாப்பு அடுத்து குறிப்பிடத்தக்கதாகும். அல்லாஹ் அல்குர்ஆனிலே இது தொடர்பாக குறிப்பிடும் போது நீண்ட விளக்கங்களை வழங்குகின்றான். அவற்றில், ' விசுவாசிகளே! ஒரு சமுகத்தார் மற்ற சமுகத்தாரை பரிகாசம் செய்ய வேண்டாம். பரிகாசம் செய்யப்படும் அவர்கள் பரிகாசம் செய்யும் இவர்களை விட சிறந்தவர்களாக இருக்கலாம். எந்தப் பெண்களும் மற்றெந்தப் பெண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். பரிகாசம் செய்யப்படும் அவர்கள் பரிகாசம் செய்யும் இவர்களை விட சிறந்தவர்களாக இருக்கலாம். உங்களில் சிலர் சிலரை குறை கூறவும் வேண்டாம். உங்களில் சிலர் சிலரை பட்டப்பெயர் கூறி அழைக்கவும் வேண்hம். விசுவாசம் கொண்டபின்னர் (தீயவற்றைக் குறித்துக் காட்டும்) தீய பெயர் கூறுவது மிகக் கெட்டதாகிவிட்டது... விசுவாசிகளே! தவறான எண்ணத்தில் பெரும்பாலானவற்றை நீங்கள் தவிர்த்துக்கொள்ளுங்கள். நிச்சயமாக (தவறான) எண்ணத்தில் சில பாவமாகும். (எவருடைய குறையையும்) நீங்கள் துருவித்துருவி விசாரித்துக்கொண்டிருக்காதீர்கள். உங்களில் சிலர் சிலரைப் புறம் பேசவும் வேண்டாம்... ' (49:11-12)

    இவ்வாறு பல வசனங்களின் ஊடாக ஆட்சியின் கீழ் வாழும் மக்களது கௌரவப் பாதுகாப்பிற்கான உத்தரவாதத்தினையும் உரிமையை இஸ்லாம வழங்குகிறது. ஒருவன் மற்றொருவனுடன் அவனது கௌரவம் பாதிக்கப்படும் வகையில் நடநந்து கொண்டால், அவன் எந்த அந்தஸ்தில் உள்ளவனாக இருந்தாலும் அவனுக்குரிய தண்டனையை இஸ்லாமிய அரசு வழங்கும். இதற்கு சிறந்த சான்றாக ஆரம்பத்தில் கூறப்பட்ட எகிப்தின் ஆளுனர் அம்ரிப்னுல் ஆஸ் (ரழி) அவர்களுடன் உமர் (ரழி) அவர்கள் நடந்துகொண்ட விதத்தினைக் கூறலாம்.

     பாதிக்கப்பட்டவன் முஸ்லிமாக, முஸ்லிமல்லாதானாக இருப்பினும் அனைவருக்கும் ஒன்றாகவே கொள்ளப்படும். எனவேதான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு பயந்துகொள்ளுங்கள். அவன் முஸ்லிம்லாதவனாக இருப்பினும் சரியே அவனுக்கும் அல்லாஹ்வுக்குமிடையில் எத்தகைய திரையுமில்லை' (முஸ்னத் அஹ்மத்)

யார் ஒரு திம்மியை (இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழும் முஸ்லிமல்லாதவர்) நோவினை செய்கின்றாரோ, அவர் என்னை நோவினை செய்கின்றார். யார் என்னை நோவினை செய்கின்றாரோ அவர் அல்லாஹ்வை நோவினை செய்கின்றார்'.

     மற்றொரு முறை கூறினார்கள். யார் ஒரு முஸ்லிமல்லாத ஒரு திம்மியை இம்சிக்கின்றாரோ நான் அவருடைய எதிரியாவான். நான் யாருடைய எதிரியாக இருப்பேனோ மறுமையில் அவருக்கெதிராக வாதிடுபவனாக இருப்பேன்' (தாரிக் பக்தாத்)

      இவ்வாறு, முஸ்லம்கள், முஸ்லிமல்லாதார் என்ற பாகுபாடின்றி சகல தரப்பினரதும் கெரவத்தைப் பாதுகாக்கும் வகையிலான பல சட்டங்களை இஸ்லாம் முன்வைத்துள்ளது.

      மேலை நாடுகளைப் பொருத்தவரையில், வெதூறு சட்டத்திலுள்ள விடயம் என்னவென்றால், கௌரவமானவன் என்றும் உயர் அந்தஸ்துப் பெற்றவன் என்றும் நிரூபக்க வேண்டும். விசாரனையின்போது நீதிபதிகள் அடங்கிய குழுவினால் கடுமையான தாக்குதலுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும், இம்சித்தலுக்கும் அவன் உட்படுகிறான். தனது புகழுக்கு, மானத்திற்கு இழுக்கு ஏற்பட்டுவிட்டது என்று நீதிமன்றத்தில் நீதி கேட்டுச் சென்றால், அங்கு அதைவிட அதிகமாக இழிவுபடுத்தப்படுகிறான். இந்நிலையுடன் இஸ்லாமிய தீர்ப்பை ஒப்பிடும் போது, அவதூறு நிரூபிக்கப்பட வேண்டுமென்றால் அவன் 4 கண்ணால் கண்ட சாட்சிகளுடன் வர வேண்டும். அதில் ஒருவர் தடுமாறினாலும் கூட ஒருவரின் மானத்தை பரித்த குற்றத்திற்கான தண்டனையாக அவருக்கு கசையடி வழங்கப்படுகிறது. ஒரு மனிதரின் மானம் என்பதை அந்தளவு புனிதமானதாக இஸ்லாம் கருதுகிறது.

    இவை தவிர இஸலாமிய குடியரசில் வாழும் மக்களுக்காக அது முன்வைத்துள்ள உரிமைகளை மிக சுருக்கமாக குறிப்பிடுவதானால்

  • ஒவ்வொரு தனிமனிதனதும் புனிதம், பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிறது

  •   ' ஒவ்வொரு தனிமனிதனதும் சுதந்திரத்திற்கான உத்தரவாதம் வழங்கப்படுகிறது.

  •  ஒவ்வொரு தனிமனிதரும் கொடுங்கோண்மைக்கு எதிராக போரடுவதற்குரிய   சுதந்திரத்தை அது வழங்கியுள்ளது.

  •  ஒவ்வொரு தனிமனிதருக்கும் கருத்துச்சுதந்திரத்தை சழங்கியுள்ளது.

  •  ஒவ்வொரு தனிமனிதருக்கும் கூட்டமைப்புகளை உருவாக்கும் உரிமையை அது வழங்கியுள்ளது.

  • ஒவ்வொரு தனிமனிதனதும் மனசாட்சிக்கும், சமயக் கோட்பாடுகளுக்குமான உரிமையையும் சுதந்திரத்தையும் வழங்கியுள்ளது.

  • ஒவ்வொரு தனிமனிதனதும் மத உணர்வுகளுக்குரிய பாதுகாப்பையும், உரிமையையும் அது வழங்கியுள்ளது.

  • ஒவ்வொரு தனிமனிதனையும் எதேச்சதகாரமாக அவசரகால சட்டத்தின் அடிப்படையில் சிறைப்படுத்துவதிலிருந்து பாதுகாக்கும் உரிமையை வழங்குகிறது.

  • ஒவ்வொரு தனிமனிதனதும் வாழ்வின் அடிப்படைத் தேவைகளையும் பூரணப்படுத்துவதற்கான உரிமையை அது வழங்குகிறது.

  •   ஒவ்வொரு தனிமனிதனும் ஆட்சியாளரை கேள்வி கேட்கும், அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும் உரிமையை இஸ்லாமி ஆட்சிமுறையில் வழங்குகிறது.

  • ஒவ்வொரு தனிமனிதனதும் தீமையைத் தடுப்பதற்கான உரிமையை அது வழங்குகின்றது.

  • ஒவ்வொரு தனிமனிதனும் அரச விவகாரங்களில் கலந்து கொள்ளும் உரிமையை அது வழங்குpறது.

யுத்தங்களின்போது எதிரிகளின் உரிமைகள்
    இஸ்லாம் முஸ்லிம்களுடன், முஸ்லிம் ஆட்சியில் அரசியல் உடன்படிக்கை செய்துகொண்டு வாழும் முஸ்லிமல்லாதோர் மாத்திரமன்றி, முஸ்லிம்களுடன் யுத்தம் புரியும் நிலையிலுள்ள எதிரிகளுடன் கூட எவ்வாறு எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், அவர்களுக்குரிய உரிமைகள் என்னவென்பதை சொல்லி, நடைமுறைப்படுத்திக் காட்டியுள்ளது.

     மேற்கு நாடுகள் இருபதாம் நூற்றாண்டில் கூட யுத்தங்களின் போது நடந்து கொண்ட காடைத்தனமான செயற்பாடுகள் காரணமாகவே, 1948 ஆம் ஆண்டு ஐ.நா. சபை உருவாக்கப்பட்டது. அவ்வாறு இருந்தும்கூட இக்கட்டுரை எழுதப்படும் இந்த நேரத்திலும் கூட அவர்கள் முஸ்லிம் நாடுகளில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் பல நாடுகளில் செய்கின்ற அட்டூளியங்கள், பெண்களை பாலியல் பலாத்காரத்துக்குற்படுத்தி, கொலை செய்து, சிறுவர்கள், வயோதிபர்கள் என பாராமல் அனைவரையும் கொலை செய்து இனச்சுத்திகரிப்;பு  நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதனைக் காணலாம்.


   இவர்கள் பேசும் போர்த் தத்துவங்கள், உரிமைகள் முஸ்லிம்கள் அவர்களுக்கெதிராக போர் செய்கின்ற போது முஸ்லிம் தரப்பினரால் மட்டும் பேணப்பட வேண்டியவை. அவை அவர்களால் பின்பற்றப்பட அவசியமில்லாத ஒன்றாகவே கருதுகின்றனர். போதாக்குறைக்கு, தாம் தாம் உலகிற்கு போர்ச்சட்டங்கள், கைதிகள் பற்றிய உரிமைகளை வழங்கியோர் என்று பெறுமைப்படவும் செய்கின்றனர்.

     ஆனால், இஸ்லாம் போரின்போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை 1400 வருடங்களுக்கு முன் சொல்லியது மட்டுமல்ல, செய்தும் காட்டியது. போர்க்காலங்களின்போது போரில் கலந்துகொள்ளாத மக்களுடைய உரிமைகளை இஸ்லாம் வழங்கியுள்ளது. எதிரி நாட்டைச் சேர்ந்தோராக இருப்பினும் அவர்களில் போரில் ஈடுபடாத பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள், அங்கவீனர்களுக்கு பாதகம் ஏற்படாத வகையில் நடந்து கொள்வதை இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது.

    இது தொடர்பாக நபி (ஸல்) கூறும் போது, 'வயது முதிர்ந்தவர்கள், குழந்தைகள், பெண்கள், ஆகிய யாவரையும் கொல்லாதீர்கள்' (அபூதாவூத்)
   
      'மடங்களிலுள்ள துறவிகளை கொல்லாதீர்கள். வணக்கத்தலங்களிலுள்ள சந்நியாசிகளைக் கொல்லாதீர்கள்' (முஸ்னத் அஹ்மத்)

     போரின்போது தரையில் ஒரு பெண்ணின் சடலம் வீழ்ந்து கிடப்பதைக் கண்ட நபியவர்கள் கூறினார்கள், 'இவள் போர் செய்யவில்லை. பின் ஏன் இவள் கொலைக்கு ஆளானால்!?'.

     போரில் கலந்து கொள்ளாத மக்கள் போரின்போதோ அல்லது அதற்குப் பின்போ, கொள்ளப்படக்கூடாது, என்ற கோட்பாட்டினை இந்த ஹதீஸ்கள் தெளிவாக கூறுகின்றன.

போரில் கலந்து கொண்டு போராடுவோருக்கான உரிமைகள்

    போராட்டத்தில் கலந்து கொண்டு போராடும் போராட்ட வீரர்களுடன் கூட ஒரு முஸ்லிம் தான் நினைத்தவாறெல்லாம் நடந்துவிட முடியாது. அதற்கும் சில வரையறைகளை இஸ்லாம் விதித்துள்ளது. 

  
  •       ' நெருப்பினால் சித்திரவதை செய்வதை இஸ்லாம் தடை விதிக்கிறது.
 
  •    'காயம் பட்டவர்களுக்குரிய பாதுகாப்பை இஸ்லாம் உறுதி செய்கிறது

  •    'போர்க்கைதிகள் கொல்லப்படக்கூடாதென்பது முக்கிய விதி

  •    'கட்டிவைத்து எந்த ஒருவரையும் யுத்தத்தில் கொல்லக்கூடாது

  •    'எதிரி நாட்டில் கொள்ளையிடல் தடை செய்யப்பட்டுள்ளது

  •    'எதிரிகளின் உடைமைகள் புனிதம் பேணப்படல் வேண்டும்.

  •    'இறந்த சடலத்திற்கு மதிப்பளித்தல்

  •    'எதிரிகளின் சடலங்களை திருப்பிக் கொடுத்தல் அவசியம்

  •    'ஒப்பந்தங்களை எக்காரணம் கொண்டும் மீறுவது தடை செய்யப்பட்டுள்ளது.

  •    'போர் அறிவிப்பை செய்யாமல் தாக்குவது தடை செய்யப்பட்டுள்ளது

  •    'அழிவு வேலைகளில் இறங்குவது தடை செய்யப்பட்டுள்ளது

  •    'போர் வீரர்களின் உறுப்புகளைச் சிதைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

  •    'போராட்டத்தின் போது தூதுவர்;களைக் கொலை செய்வது தடை

  •    'நம்பிக்கைத் துரோகமிழைத்தல் தடை செய்யப்பட்டுள்ளது.

  •    'கட்டமைப்பு சிதைந்து போதல் தடை செய்யப்பட்டுள்ளது.

  •    'கூச்சல் கூப்பாடு, ஆரவாரம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது

  •    'மிருகத்தனமான நடைமுறைகளுக்கு எதிரான வழிகாட்டுதல்களுக்கு தடை
 

       இந்த ஒவ்வொரு வகையாக உரிமைகளுக்கும் அல்குர்ஆனிலும் நபி (ஸல்) அவர்களது அறிவிப்புக்களிலும், குலபாஉர்ராஷிதூன்களது அறிவுரைகளிலும், இஸ்லாமிய போராட்ட வரலாறுகளிலும் ஏராளமான ஆதாரங்களும், முன்னுதாரணங்களும் காணப்படுகின்றன. இஸ்லாமிய வரலாற்றை மீட்டிப்பார்த்தால், இந்த போராட்ட உரிமைகளை மீறி செயற்பட்டமைக்கான எந்த ஆதாரங்களையும் கண்டுகொள்ள முடியாது.

      ஆனால், இஸ்லாத்தின் மீது கால்ப்புணர்வு கொண்ட, நடுநிலை நின்று வரலாற்றை அனுகாத சிலர் இஸ்லாம் இரத்த வெறி கொண்ட மார்க்கம் என்ற அபாண்டத்தினை சுமத்துகின்றனர்.

     இஸ்லாம் மாத்திரம்தான் போராட்டத்தைத் தூண்டுகின்றதா? ஏனைய மதங்கள் அது பற்றி ஒன்றும் பேசவில்லையா!?  என்று சற்று நோக்கிப் பார்த்தால், ஏனைய சில மதங்களில் மிகக் கொடூரமான முறையில் உரிமைகளை மதிக்காது கூறக்கூடிய நிலையையும் நாம் அறிய முடிகிறது.

    இந்து மதம் அகிம்சையையும், துறவும் மட்டும் பேசும் மதமா!? அதன் ரிக் வேதத்தில் காணப்படும் போர்பற்றிய ஏராளமான வசனங்களுள் உதாரணத்திற்காக ஒன்றைக் குறிப்பிடுகிறேன்,

   'இந்திரனே! போற்றத்தகுந்ததும், வெற்றியின் மூலமாய் இருப்பதும் பகைவர்களைத் தாழ்த்துவதுமான திரண்ட செல்வத்தை எங்களுக்களிக்கவும்!

     நாங்கள் எப்போதும் பாதுகாப்போடு கைகலந்த போரிலோ, குதிரை மீது செய்யப்படும் சண்டையிலோ அச்செல்வத்தால் பகைவர்களை வெற்றி கொள்வோமாக!' ((1:8:1-2)

    சாமவேதத்தில் இது பற்றி குறிப்பிடும் போது,'வச்சிராயுதம் உள்ளவN! ஐசுவரியத்தை அளிக்கவும்.அறிவின் பகைவனைத் துரத்தவும். இந்திரனை பூஷனனை துரிதமாக போர்ச் செல்வங்களைக் கொள்ளையடிக்க பலமுடனாவதற்கு அழைப்போம்' (முதல் பாகம் 3:11:6,9)

    பகவத் கீதையைப் பொருத்தவரையில் அது ஆன்மீக நூலாக இருப்பினும் அதன் மையப் பொருள் போரேயாகும். இரத்தத்தைப் பார்த்து பயந்து ஒதுங்க நிiனைக்கும் ஒரு போர் வீரனை உத்வேகப்படுத்தும் ஒரு நூலாக அது காணப்படுகிறது. ஆரியர் பண்பாடு இந்தியாவில் முழுமையான வளர்ச்சியை அடைந்ததும், அஸ்தினாபுரத்தைமையமாகக் கொண்டு ஆட்சி புரிந்த அவர்களிடையே அதிகாரம், செல்வம் தொடாபாக ஏற்பட்ட பிணக்குகளும், பூசல்களும் ஆளும் வர்க்கம் கௌரவர்கள், பாண்டவர்கள் எஎன இரண்டு பிரிவாகப்பிரிந்தது. சமாதான முயற்சிகள் யாவும் தோற்றுப்போன பின்பு வாட்கள் மூலமாகத்தான் தீர்ப்பு ஏற்படும் என்ற நிலையில் இரு தரப்பினரும் போரில் குதித்தனர். அதனை மையப் பொருளாகக் கொண்டே அவ்வேதம் அமையப் பெற்றுள்ளது.

     அதேபோன்று, மனு தர்ம சாஸ்திர நூலைபட பொருத்தவரையில், இந்தியாவில் ஆரியர் முழு அதிகாரத்தையும் பெற்று, பண்பாடு, கலாசாரம் போன்றவற்றில் தமது மேலாதிக்கத்தை நிலைநாட்டிய பின்பு தொகுக்கப்பட்ட சட்ட நெறிமுறை நூலே மனு தர்ம சாஸ்திர நூலாகும். எனவே, இந்நூலில் போர் குறித்த எல்லா வகையான சட்டவிதிகளையும் பார்க்க முடியும்.

    யூதர்களின் தவ்றாத் வேதத்தைப் பொருத்தவரையில், தவ்றாத் வேதம் நெடுகிலும் போரைப் பற்றிய சட்டங்களே காணப்படுகின்றன. பல இடங்களில் போரிடுமாறு கட்டளையிட்டுள்ளது. ஆனால், இரண்டே இரண்டு இடங்களைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் போருக்கான காரணத்தைக்கூட கூறப்படவில்லை. இதனை அவர்களது வேதத்தில், சட்டம். அத்தியாயம்:2, 33 ஆகியனவற்றில் காணலாம். இவ்வேதத்தில் போர் பற்றி கூறும் வசனங்களுக்கு உதாரணமாக, 'இப்பொழுது எழுந்து பயணமாகுங்கள்! அர்னோன் ஓடையைக் கடந்து செல்லுங்கள்! இதே எமோரியனும், எஸ்போனின் அரசனுமாகிய சீகோனையும் அவனது நாட்டையும் உங்களிடம் கையளித்துள்ளேன். அதனை உடைமையாக்கிக் கொள்ள அவனோடு போராடுங்கள்!' (2:24)

     கிருஸ்துவத்தின் விவிலிய நூலின் பழைய ஏற்பாட்டில் பின்வருமாறு கூறப்படுகிறது, 'நீர் ஒரு நகரத்துக்கு எதிராக போர் புரிவதற்கு அதன் அருகில் வந்தால் முதலில் சமாதானத்தைப் பிரகடனம் செய்யவும். அந்நகரம் பதிலுக்கு சமாதானத்தைப் பிரகடனம் செய்து உமக்கு அந்நகரத்தை திறந்துவிட்டால், அந்நகரத்திலுள்ள அனைவரும் உமது ஆட்சிக்குற்பட்டோராவர். ஆனால் அவர்கள் சமாதானப் பிரகடனம் செய்யாது உமக்கெதிராக போர்ப்பிரகடனம் செய்தால், நீர் அந்நகரத்தை முற்றுகையிடுதல் தகும். தொடர்ந்து இறைவன் அந்நகரத்தை உம் கைக்குள் தந்ததும், அங்குள்ள ஒவ்வொரு ஆணையும் உம் வாளினால் தாக்குக. எனினும், அந்நகரத்திலுள்ள பெண் குழந்தைகள், கால் நடைகள், ஏனைய பொருட்கள் அனைத்தையுளும் நீர் எடுத்துக் கொள்க. அவ்வாறு இறைவன் உமக்குத் தந்த எதிரிகளின் பொருட்கள் அனைத்தையும் நீங்கள் உண்ணலாம். இவ்வாறு, இந்நாடுகளைச் சாராத தூர இடங்களிலுள்ள நகரங்களுக்கும் இது பொருந்தும். ஆனால்;, இறைவன் இவர்களுக்கு வாரிசாகக் கொடுத்த நகரங்களிலுள்ள எதனையும் விட்டுவைக்க வேண்டாம். அவற்றையெல்லாம் அழித்து விடுக!'

      இவ்வேத வசனங்கள் மிகத் தெளிவாக சொல்லும் விடயம், யுத்தம் மேற்கொள்ளும் சந்தப்பங்களின்போது இஸ்லாம் முன்வைத்துள்ள உரிமைகள் எதுவும் இவ்வேதங்களில் குறிப்பிடப்படவில்லை. மாறாக, இஸ்லாத்தை விமர்சிக்கும் இத்தகையவர்களது போர் நடவடிக்கைகளின் போது தீவிரமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதையும் காணலாம்.

    அந்தவகையில், இஸ்லாம் முன்வைத்துள்ள போர்ச்சட்டங்களில் பேணப்படும் மனித உரிமைகளைப் போன்ற பரிபூரணத்துவமும், மனிதாபிமானமும் மிக்க உரிமைகளை வேறெங்கும் காண முடியாது.

முடிவுரை

    இஸ்லாம் முன்வைத்துள்ள மனித உரிமைக் கோட்பாடானது சமுகத்தின் தனிமனிதன் முதல், சமுக வாழ்வின் அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கியதாக  காணப்படுகின்றது. இஸ்லாத்தின் மனித உரிமைக் கோட்பாடானது, மேற்கத்தைய கோட்பாட்டிலிருந்து முற்றுலும் வேறுபட்டது. காரணம், அது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. மாறாக, படைத்த இறைவனால் மனிதன் கேட்காமலேயே அவனது நலன்காக்க வழங்கப்பட்டதாகும்.

    இஸ்லாத்தின் மனித உரிமைக் கோட்பாடானது ஒரு முஸ்லிமின் ஆன்மீக வாழ்வுடன் பின்னிப் பிணைந்து காணப்படுவதாலும், அவை அவனது மறுமை வாழ்வுடன் தொடர்பு படுவதாலும், மேற்கத்தையர்களைப் போன்று அவர்களுக்கு சார்பானவர்களுடன் உரிமை பேனுவதும், மற்றையவர்களுடன் உரிமை மீறுவதும் முஸ்லிம்களைப் பொருத்தவரையில், முடியாத ஒன்றாகும்.

     இன்று ஐ.நா. சபையின் மனித உரிமைப் பிரகடனம் உலகின் வல்லரசுகளது, குறிப்பாக, அமேரிக்காவில் நலன்காப்பதற்கும், அதன் ஆதிக்கத்தை சர்தேசவளர்முக நாடுகளில், குறிப்பாக, இஸ்லாமிய நாடுகளில் தினிப்பதற்காகவும் அயராது உழைத்துக் கொண்டிருக்கின்றன.

     உலகில் தோன்றிய மனித உரமைப் பிரகடனங்கள், இறை நம்பிக்கையின், இறையச்சத்தின், மறுமை பற்றிய விசுவாசத்தின், ஆன்மிக பரிமானத்தின் அடிப்படையில் அமையப் பெறாமல், வெறும் மனித சிந்தனையின் அடிப்படையில் உருவானமையால், அவர்களால் உருவாக்கப்பட்ட ஏனைய சட்டங்களைப் போல நிறைய குறைபாடுகளும், ஏனைய சட்டங்கள் போலவே அடிக்கடி மாற்றங்களுக்குள்ளாகும் அம்சங்களாகவே காணப்படுகின்றன. மாத்திரமன்றி, மனித சமுதாயத்தின் அழிவுக்கே அவை காரணங்களாகின்றன.

     எனவேதான் கலாநிதி De.Santillana அவர்கள் 'சட்டமும் சமுதாயமும்' (Law and Society) என்ற தனது கட்டுரையில் குறிப்பிடும் போது, 'முஸ்லிம் சட்ட அறிஞர்கள், 'சட்டத்தின் அடிப்படை'சுதந்திரம் எனக் கூறும்போது, நாங்கள் தயக்கமின்றி இக்கருத்தோடு உடன்படலாம். நியாயமான சுதந்திரத்தை சாத்தியமாக்குவதற்காக இறைவன் மனிதனின் செயற்பாடுகளுக்கு ஒரு எல்லையையும் வரம்பையும் ஏற்படுத்தியுள்ளான். இறைவன் வகுத்துள்ள இந்த வரம்புகளின்றி சுதந்திரம் என்பது உரிமையின் துஷ்பிரயோகமாக மாறிவிடும். இது இவ்வாறு துஷ்பிரயோகம் செய்பவனையும், அவன் ஓர் அங்கமாக சமுகத்தையும் சேர்த்து அழித்துவிடும். இந்த நிலை ஏற்படாதிருக்க இறைவன் வகுத்துள்ள எல்லையே சட்டமாகும்'.

    அந்தவகையில், இறைவனால் இற்றைக்கு 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட மனித உரிமைப் பிரகடனத்தின் சுருக்கமே இக்கட்டுரையாகும் உண்மையில், இஸ்லாம் முன்வைத்துள்ள மனித உரிமைகள் தொடர்பாக ஆராய்வதென்பது ஒவ்வொரு உரிமை தொடர்பாகவும் ஆதாரங்களுடன் விரிவாக ஆராய்வதற்கு இந்த சிறிய கட்டுரை இடம்தரமாட்டாது. ஒவ்வொரு தலைப்பும் மிக விரிவாக ஆராயப்பட வேண்டிய தலைப்புகளாகும்.

     எனவே, இஸ்லாம் முன்;வைத்துள்ள மனித உரிமைகள் தொடர்பான ஒரு தொட்டுக்காட்டலே இந்த கட்டுரையாகும். உண்மையில், இந்த கட்டுரை மனித உரிமை தொடர்பான விரிவான, விமர்சன ரீதியான தேடலுக்கு தூண்டும் முயற்சியாக அமைய பிரார்த்திக்கிறேன்!

உசாத்துணைகள்
01. மௌதூதி, அபுல் அஃலா, இஸ்லாத்தில் மனித உரிமைகள் (மொழிபெயர்ப்பு)
   முதல் பதிப்பு, 1986, இஸ்லாமிக் நிறுவனம் ட்ரஸ்ட் வெளியீடு, சென்னை.

02. கலாநிதி. சுக்ரி, எம்.ஏ.எம்., இஸ்லாமும் மனித உரிமைகளும், முதல் பதிப்பு,
   1995, நளீமியா இஸ்லாமிய வெளியீட்டுத் தினைக்களம், பேருவலை.

03 அப்துல் ஹஃபீஸ், இஸ்லாத்தில் உரிமைகள் கடமைகள், முதல் பதிப்பு,          1991, இஸ்லாமிக் பவுன்டேஷன் டிரஸ்ட் வெளியீடு, சென்னை.

04 செல்லப்பா, கொடிக்கால், புறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி, முதல் பதிப்பு,  2002, இலக்கியச் சோலை வெளியீடு, சென்னை.

05. மௌதூதி, அபுல் அஃலா, ஜிஹாத் ஓர் இஸ்லாமியப் பார்வை (தழிழாக்கம்)
   முதல் பதிப்பு, 2008, திண்ணைத் தோழர்கள் பதிப்பக வெளியீடு, தழிழ்நாடு.

06. முஹம்;மது கான் பாகவி, அ, இஸ்லாத்தின் மீதான விமர்சனங்களும் விளக்
   கங்களும், முதல் பதிப்பு, 2006, கிராபிக் பார்க் வெளியீடு, சென்னை.

07. டாக்டர். ஜாகிர் நாயக், இஸ்லாம் வழங்கும் பெண்றுரிமைகள், முதல் பதிப்பு,
   2008, சாஜிதா புக் சென்டர் வெளியீடு, சென்னை.

08. ஜைனுல் ஆபிதீன், பீ, இஸ்லாம் குற்றச்சாட்டுக்களும், பதில்களும், ஐந்தாம்
   பதிப்பு, 2000, நபீலா பதிப்பகம் வெளியீடு, சென்னை.

09. Ahmed E. Souaiaia. Human Rights & Islam, The Divine and the Mundane in
       HumanRights Law, First Edition, 2003, University of Washington, New York.


10. ஜாமிஅதுல் மதீனா அல்ஆலமிய்யா, ஹூகூகுல் இன்ஸான் பில் இஸ்லாம், கிதாபுல் மாத்தா, ஜாமிஅதுல் மதீனா அல்ஆலமீய்யா வெளியீடு, 2009.

11.http://ta.wikipedia.org/wiki/மனித உரிமைகள்